Apr 27, 2012

மழை நேரம்

மழை நேரம் 
மனதோடு.. 
சிறு தூறல் போல வந்தாய் 
 
சில நேரம்
உயிர் பூவே..
என் தோளில் சாய வந்தாய்

கனவில் சொன்ன காதல் எல்லாம் 
நேரில் சொல்ல வந்தாயோ...

நீரில் நனைந்த பூக்களோடு 

நானும் நனைந்து 
கிடந்த பொழுது    

கைகள் பிடித்து 
நடக்க வந்தாய்.... 

சாலையெல்லாம் ஈரமாய் 
இருந்த விதமும் 
பிடித்ததே... 

உனது அருகில் 
இருந்த போது
மழை நெருடல் கூட 
இனிக்குதே... 

தூறல் விழுந்து 
தெறித்த போது 
என் சட்டை கூட சிரித்ததே..

குடை இருந்தும்
இன்று மட்டும்
நனைய ஆசை எழுந்ததே..

 என்ன துயரம் என்ற போதும் 
வருத்தமில்லை
என் மின்னல் பூவே....

உன் வாசம் நுகர்ந்து 
வாழும் போது 

சாவும் அஞ்சிடும் 
என்னை நெருங்கவே.....    

மழை பட்ட மண்ணும் இன்று
உன் கால்கள் பட்டு
தெளிந்ததே...

 உயிரின் ஓரம்
தேக்கி வைத்த கவலை எல்லாம்
வெளுத்து போக....

நீயும் வந்தாயோ...

மழை ஓய்ந்த பின்னும்
ஓயாத வானவில்லாய்....