Sep 29, 2010

அருகாமை..

மூச்சுக் காற்று படும் தூரத்தில் நீயிருந்தும்..

விலகி இருந்தோம்..

அன்று கற்று கொண்டேன்..

இரண்டடி தூரத்தில்

அமுதம் இருந்தாலும்

பசித்திருக்கும் யுக்தி!!!!

Sep 28, 2010

வரம்

உன் மடியோடு
தொடங்குகையில்

அந்த மரணமும்
இன்னுமொரு தொடக்கம் என்பேன்...

எனக்கு மரணிக்கிற வாய்ப்பையாவது வழங்கு!

காத்திருப்பு

ஒரு நாள்
உன்னை பார்க்காது போனதில்

என் காகிதங்கள் எல்லாம்

வியர்த்து போயின..

கவிதை வார்க்கிற
மை துளிகளால்...

என்னை கவியாக்கிய கண்மணிக்கு...

கவிதை என்றவுடன்

எதுகை மோனையில்

என்னை தொலைக்க

எண்ணி இருந்த போது

'என்னில் தொலைந்து..எழுதுக கவி' என

என்னை பணித்த


ஒற்றை உயிருக்கு..


எனது ஆயுள் முழுதும்

படைத்தது கொண்டிருப்பேன்

கவிதை படையல்!!!