Dec 29, 2013

உயிர் கொத்திப் போன கிளி

உன்ன பார்த்த அந்த நிமிடம்
சுற்ற மறந்ததே என்னோட உலகம்..
உன் குரல் கேட்ட அடுத்த நிமிடம்
எகுரி குதிச்சுதே  என்னோட இதயம்..

முத்துப் போல பேசின நீ
முதல் காதலே
கண்ணக் கட்டிக் காட்டுல விட்டது போல்
என்ன கட்டி எங்கடி விட்ட புள்ள..??

காதலென்னும் நோயத் தந்த...
களவு பண்ணி எங்க போன..
மருந்தூட்டும் தூரத்துல நீ இல்ல
மனம் நோகுதடி திருட்டுப்புள்ள...!!!

எல்லாம் தெரிஞ்சும் மௌனமென்ன
தெற்றுப் பல் சிரிப்புல என்ன தெறிக்க வெச்ச
எட்டி நின்னு கண்ணடிச்சே
எங்கடி போன மக்குப்  புள்ள.... ??

பூப்பறிக்கும் குழந்தைப் போல
உன்னப் பாத்து ஆசைப் பட்டேன்
எந்த ஊரில் ஒழிஞ்சுகிட்டே
மனசு எரியுதடி பாவிப் புள்ள...!!!

நீ சிந்தும் கண்ணீரா
கலந்து வழிஞ்சு போன போதும்
மீண்டும் உன்ன காதலிக்க
வந்ததொரு காலமடி ...

நீ அழகா...
நிலவழகா...
பட்டிமன்றம்  போட்ட வானம்
இன்று...

பட்டுப் போய் கிடக்குதடி...

என் ஊரு பட்டுக் கிளியே...
பாதி வழி மட்டும் வந்து

என் உயிர் கொத்தி நீ போன இடம்
அந்த வானத்துக்கே தெரியாதுன்னா...

நான் என்ன செய்ய

நல்லவளே...

பதில் சொல்லு!!!