Jul 10, 2015

அன்பே போ

அன்பே போ
நீ வேண்டாம்
அழகே போ
கண்ணீர் வேண்டாம்..

உன்னோடு பேசாத
நொடியெல்லாம்
நீளட்டும்
நீ வேண்டாம்...

உன்னை பார்க்காத
பொழுதெல்லாம்
கொல்லட்டும்
நீ வேண்டாம்..

விஷமென்று தெரிந்தும்
ஆசை கொண்டேன்
என் நிழல் வரை
உனையேந்தி ஏக்கம் கொண்டேன்

பொய் காதல் போதும்
பூவே போ
மௌனம் துப்பும்
உயிரே போ

என்னை பிரிந்த
என் தேவதையே
உன்னை பிரிவிவதில்
வலி இல்லையே

உண்மை தானே
பொய் இல்லையே..
உன் போல் பொய்யாய்
வேறில்லையே... 

Apr 19, 2015

அன்பே நீ என் வரமா...?

காற்று வீசும் பாதை பார்த்து
காத்து கிடக்கும் நான் ஒரு மரமா
இதயம் முழுதும் காதல் தந்தாய்
அன்பே நீ என் வரமா.... ?

தூக்கம் தொலைத்த ஒற்றை பறவை
நான் ஆகிறேன் -
உன் தோளில் சாயும் ஒரு நிமிடம் வேண்டும்
என்று ஏங்கினேன்...

காத்திருக்கும் காலம் யாவும்
கனவுகளில் போகும் போகும்
சேர்த்துவைத்த ஆசை சொல்ல
வழி ஒன்று வேண்டும் வேண்டும்

உனதெனது ஏதுமில்ல
உண்மை அதுதான்
உந்தன் பார்வை படாத போது
நானும் ஊமை தான்...

இடம் பொருள் ஏவல்
உன் காதலுக்கில்லை
உயிருக்குள் ஊடேறி
இம்சிக்கிறாய்...

தடம் அறியா மழலை
நான் ஆகிறேன்
கடலுக்குள் சிக்கிய
மழையாகிறேன்.....

எண்ணங்கள் யாவிலும்
உன் வண்ணமே
வழி துணை எனவே
நீ வேண்டுமே...

உருகும் பனியென என் மனம் உருக
உன்னை தேடி நான் தேய்கிறேன்
விழுகும் மலர் சருகுகள் யாவிலும்
உந்தன் பெயரே நான் காண்கிறேன்....

காற்று வீசும் பாதை பார்த்து
காத்து கிடக்கும் நான் ஒரு மரமா
இதயம் முழுதும் காதல் தந்தாய்
அன்பே நீ என்  வரமா.... ?

Nov 14, 2014

ஏதேதோ எண்ணங்கள்...

ஏதேதோ எண்ணங்கள்
எதிர்பாரா ஏக்கங்கள்
என்னோடு என்னோடு...

பொய்யான கோபங்கள்
பூப்பூக்கும் வெட்கங்கள்
கொண்டேனே உன்னோடு....

சரிதான பிழைதான
எப்போதும் உன் தாக்கம்..

நீ தானா நான் ஆனேன்
பறிபோச்சே என் தூக்கம்...

உனக்கென்ன பேரழகே
உனை வெறுக்க யாரிங்கே..
நீ தூரம் போன ஒரு நிலவு
எரிகிறதே என் கனவு..

எப்போதும்  புன்சிரிப்பு
எல்லாமே விளையாட்டு..
என் வாழ்க்கை
ஒரு மைதானமா உனக்கு??  

பூக்களிருக்கு பூமி சிரிக்க
நீ இல்லையே நான் உயிர்க்க..

கனவிருக்கு சேர்ந்து நடக்க
பாதை இல்லையே நாம் கடக்க...

வண்ணமெனவே வந்துவிட்டாய்
என் வெள்ளைத்தாளை நிரப்பிவிட்டாய்
வெறுமைகளை விரட்டிவிட்டாய்

இன்று ஏனோ
மறந்துவிட்டாய்...
என்னை நீயும்
துரந்துவிட்டாய்....

இதயத்தை கொடுத்துவிட்டேன்
இருந்ததெல்லாம் இழந்துவிட்டேன்
இனி ஒரு முறை
சந்திக்க நேரும்

அன்று வரை
வைத்திரு உன் உள்ளங்கையில்

நான்  திணித்து அனுப்பிய
என் உயிரை...




   

Sep 25, 2014

காதலே.. உயிர் தேடலே..

"அப் தும் ஹி ஹோ.." என்றேன்...
மௌனத்தை பரிசாக்கினாய்...

இதோ.. உனக்கு புரிகிற மொழியில் என் காதல் வரிகள்....

உனக்காக வாழ்ந்திடும் வரம் ஒன்று போதும்
அதற்காகத்தானே ஏங்குகிறேன்..

உன் விரல் பிடித்திடும் சுகம் ஒன்று போதும்
அதற்காகத்தானே ஏங்குகிறேன்..

காதலே
உயிர் தேடலே
என் உயிருக்குள்
உனை பதுக்கினேன்...

காதலே
உயிர் தேடலே
நீ சிரித்ததில்
நான் சிதறினேன்...

மழை பொழுதில் வரும்
தனிமைகளில்
உன் அணைப்புக்குள் தொலைந்திட ஏங்குகிறேன்...

உன் அணைப்புக்குள் தொலைந்திடும்
அந்நொடியில்
என் இறப்பையும் நேசிக்க கற்றுக் கொள்வேன்...

ஆருயிரே உன்னை யாசிக்கிறேன்
என் காதலை புரியாதா ??

காதலே
உயிர் தேடலே
என் உயிருக்குள்
உனை பதுக்கினேன்...

காதலே
உயிர் தேடலே
நீ சிரித்ததில்
நான் சிதறினேன்...

உன் கையை நான்
பிடித்திருக்க..
எப்போதுமே நினைத்திருந்தேன்

உன் பார்வைகள் காட்டிய காதலை கேட்டு
நீ சென்ற பாதையை தினம் தினம் பார்த்து...

ஆருயிரே உன்னை யாசிக்கிறேன்
என் காதலை புரியாதா ??

காதலே
உயிர் தேடலே
என் உயிருக்குள்
உனை பதுக்கினேன்...

காதலே
உயிர் தேடலே
நீ சிரித்ததில்
நான் சிதறினேன்...

காதல் துரோகியே..

தேவதைகள் வெறுக்கப் படுவதில்லை 
நெஞ்சறுத்து நேச துரோகம் செய்த போதும்.....

நீ தேவதைகளில் ஒருத்தியோ... 
நினைவு கிண்ணத்தில் நிறைந்து 
என் மூச்சு காற்றை விழுங்கி 

ஒன்றுமறியா குழந்தை போல 
ஓரப்  பார்வை வீசுகிறாய்...

கனாக்களில் காதல் சொல்வாய் 
எங்கே..
என் கண்களில் உற்று நோக்கி 
சொல்... என்னை  பிடித்ததாய்... 

நெற்றியும் இன்றயும் பாரமாக்கிய
என் பாசத்திற்குரிய காதல் துரோகியே..

காதல் இருந்தால்..

தேநீர் கொப்பைகுள்ளே 
விழுந்த சர்க்கரை துகள்கள் போல் 
நாம் சேர்ந்தே கரைந்திடலாம் 

கம்பளி வியர்வைக்குள் 
காதல் நித்திரையாய் 
நாம் கலந்தே உறங்கிடலாம் 

ஆக்ஸிஜன் அற்று விட்ட 
ஒரு அண்டத்தில் 
இருப்பது போல் உணர்கிறேன்... 

என் பேரழகே நீ வந்தால் 
உன்னை என் சுவாசப் பை முழுக்க 
நிரப்பிக் கொள்வேன்... 

நீ அழகில்லை என்பேன் 
கோவத்தில் உன் முகம் சிவக்க 
நீ என்னை முரைத்திடும் போது 

என் காதல் கற்கண்டே என்று 
கூவி அழைப்பேன்...  

திமிரின் பின்பமாய் 
என்னை திணரடித்தாய்

நான் வெறுக்க முடியாத பவுர்ணமியாய் 
என் வானுடைத்தாய்..

நீ நூலகமாவதானால் சொல் 
உன்னில் இருக்கும் 
உயிர் மெய் ஆயுதம் அனைத்தையும் 
படித்து இறப்பேன்... 

என் நேற்றைய நாட்கள் 
வீணாய் போக 
காத்திருப்புகளை தண்டனைகளாய் வழங்கினாய் 

 உனக்கு பிடித்த பூக்கள் எல்லாம் 
என் வீட்டை அலங்கரித்தப் பின்னும் 
என் வீடு அழகாகவில்லை... 

என் கவிதையே .. 

நிலவரும்பாய் சிரித்து 
நெய் அமுதாய் பேசி 
நாளும் என் விரல் கோர்த்து நீ வராது.. 

எந்த பூவும் 
உண்மையில் பூக்க போவதில்லை 
இந்த உலகில்...


Sep 11, 2014

வண்ணம் இல்லா வானவில்

தேடினேன் இதயத்தில் உன்னால் தாக்கம்
நீ சென்ற சாலையில் பூக்களின் வாசம்

வண்ணம் ஏதுமில்லா ஒரு
வானவில் பார்கிறேன்..
எண்ணம் யாவிலும் நீயே..  நீயே..
காரணம் கேட்கிறேன்...

கனவுகளை சேகரித்து
கதை கதையாய்
பேசிடவா..

கண்களுக்குள் சோகமுண்டு
கவிதையென
எழுதிடவா...

நூறாயிரம் பாஷைகள் உண்டு

நீ அறிந்த மொழியென்ன
அதில் சொல்லவா..

என் மனம் சொல்லவா..

மேல்வானம் கருத்திட
பொழிந்திடும் மழை போல
என் மீது சட்டென்று பொழிவாயா...

தீ சுடுமென்று தெரியும்

தெரிந்தாலும் தொடச்சொல்லும்

மனம் கொண்டேன் நான்..

நீ பிழை சொல்லி
பிரிந்திட நினைத்தாய்

பிறகென்ன செய்வேன்..

சுவாசத்திலே காதல் உண்டு
சாவென்பது இல்லை என்று  
சொல்வாயே அன்பே

 இன்று என் சுவாசம் தீர
அழைத்தேனே உன்னை

அருகில் வர என்ன தடை கண்டாயோ....

நெருப்புக்கும் கிணற்றுக்கும்
இடைப்பட்ட ஒரு இடத்தில்
எனை நிறுத்த ஏன் சதி செய்தாய்...

கண் கொண்ட பின்னும்
தடுமாறி நிற்கும் விதி செய்தாய்...


 

Aug 30, 2014

அந்நாள் மீண்டும் வேண்டுமடா..



யாரை நான் குற்றம் சொல்வேன்
நெஞ்சமே...
என் விழிகளில் உன் நினைவுத்துளி..

முதல் முறை பார்த்தோம்
இதயத்தால் இணைந்தோம்

அந்நாள் மீண்டும்
வேண்டுமடா...

கனவுகள் சேர்த்தோம்
காலத்தை ரசித்தோம்

அன்பா உன்னுடன் நான்
முழுமைடா...

இந்த உலகத்தின் விழிம்பில்
நான் நின்றிருந்தாலும்
நீ என்னை காப்பாய்
உன்  உயிர் போல...

இன்று தனிமைகள் தந்து
ஏனடா சென்றாய்
கானல் நீர் போல...

நீ என்றும் நான் என்றும்
சிந்தித்ததில்லையே...

உன் முகம் கண்டு
தொடங்கிய என் நாட்கள்
இனி இருளுக்கு இரையா?

என் கணவா
நீ  வெறும் கனவா ?

என்னை விட்டு நீயும்
பிரிந்திட துணிந்தாய்...
பட்டுப்பூச்சியாய்...

சிறகுகள் எனக்கில்லையே
உன்னை தொட்டு மீட்டிட....

பூமியின் சுழற்சி
காலத்தை தின்றாலும்

இனி வரும் என் காலம்
உன் நிழல் தேடும்
இறுதி வரைக்கும்...

உன் வாசனை தேடி
என் கால்களும் போகும்
கண்ணா

தோழனாய் இருந்து
தோல்விகள் பகிர்ந்தாய்
நான் வாழ்வேன் இனியும் உன்னால்...

யாரை நான் குற்றம் சொல்வேன்
நெஞ்சமே...
என் விழிகளில் உன் நினைவுத்துளி..

முதல் முறை பார்த்தோம்
இதயத்தால் இணைந்தோம்

அந்நாள் மீண்டும்
வேண்டுமடா...

கனவுகள் சேர்த்தோம்
காலத்தை ரசித்தோம்

அன்பா உன்னுடன் நான்
முழுமைடா...