Sep 25, 2014

காதலே.. உயிர் தேடலே..

"அப் தும் ஹி ஹோ.." என்றேன்...
மௌனத்தை பரிசாக்கினாய்...

இதோ.. உனக்கு புரிகிற மொழியில் என் காதல் வரிகள்....

உனக்காக வாழ்ந்திடும் வரம் ஒன்று போதும்
அதற்காகத்தானே ஏங்குகிறேன்..

உன் விரல் பிடித்திடும் சுகம் ஒன்று போதும்
அதற்காகத்தானே ஏங்குகிறேன்..

காதலே
உயிர் தேடலே
என் உயிருக்குள்
உனை பதுக்கினேன்...

காதலே
உயிர் தேடலே
நீ சிரித்ததில்
நான் சிதறினேன்...

மழை பொழுதில் வரும்
தனிமைகளில்
உன் அணைப்புக்குள் தொலைந்திட ஏங்குகிறேன்...

உன் அணைப்புக்குள் தொலைந்திடும்
அந்நொடியில்
என் இறப்பையும் நேசிக்க கற்றுக் கொள்வேன்...

ஆருயிரே உன்னை யாசிக்கிறேன்
என் காதலை புரியாதா ??

காதலே
உயிர் தேடலே
என் உயிருக்குள்
உனை பதுக்கினேன்...

காதலே
உயிர் தேடலே
நீ சிரித்ததில்
நான் சிதறினேன்...

உன் கையை நான்
பிடித்திருக்க..
எப்போதுமே நினைத்திருந்தேன்

உன் பார்வைகள் காட்டிய காதலை கேட்டு
நீ சென்ற பாதையை தினம் தினம் பார்த்து...

ஆருயிரே உன்னை யாசிக்கிறேன்
என் காதலை புரியாதா ??

காதலே
உயிர் தேடலே
என் உயிருக்குள்
உனை பதுக்கினேன்...

காதலே
உயிர் தேடலே
நீ சிரித்ததில்
நான் சிதறினேன்...

No comments:

Post a Comment