Sep 11, 2014

வண்ணம் இல்லா வானவில்

தேடினேன் இதயத்தில் உன்னால் தாக்கம்
நீ சென்ற சாலையில் பூக்களின் வாசம்

வண்ணம் ஏதுமில்லா ஒரு
வானவில் பார்கிறேன்..
எண்ணம் யாவிலும் நீயே..  நீயே..
காரணம் கேட்கிறேன்...

கனவுகளை சேகரித்து
கதை கதையாய்
பேசிடவா..

கண்களுக்குள் சோகமுண்டு
கவிதையென
எழுதிடவா...

நூறாயிரம் பாஷைகள் உண்டு

நீ அறிந்த மொழியென்ன
அதில் சொல்லவா..

என் மனம் சொல்லவா..

மேல்வானம் கருத்திட
பொழிந்திடும் மழை போல
என் மீது சட்டென்று பொழிவாயா...

தீ சுடுமென்று தெரியும்

தெரிந்தாலும் தொடச்சொல்லும்

மனம் கொண்டேன் நான்..

நீ பிழை சொல்லி
பிரிந்திட நினைத்தாய்

பிறகென்ன செய்வேன்..

சுவாசத்திலே காதல் உண்டு
சாவென்பது இல்லை என்று  
சொல்வாயே அன்பே

 இன்று என் சுவாசம் தீர
அழைத்தேனே உன்னை

அருகில் வர என்ன தடை கண்டாயோ....

நெருப்புக்கும் கிணற்றுக்கும்
இடைப்பட்ட ஒரு இடத்தில்
எனை நிறுத்த ஏன் சதி செய்தாய்...

கண் கொண்ட பின்னும்
தடுமாறி நிற்கும் விதி செய்தாய்...


 

No comments:

Post a Comment