Aug 30, 2014

அந்நாள் மீண்டும் வேண்டுமடா..



யாரை நான் குற்றம் சொல்வேன்
நெஞ்சமே...
என் விழிகளில் உன் நினைவுத்துளி..

முதல் முறை பார்த்தோம்
இதயத்தால் இணைந்தோம்

அந்நாள் மீண்டும்
வேண்டுமடா...

கனவுகள் சேர்த்தோம்
காலத்தை ரசித்தோம்

அன்பா உன்னுடன் நான்
முழுமைடா...

இந்த உலகத்தின் விழிம்பில்
நான் நின்றிருந்தாலும்
நீ என்னை காப்பாய்
உன்  உயிர் போல...

இன்று தனிமைகள் தந்து
ஏனடா சென்றாய்
கானல் நீர் போல...

நீ என்றும் நான் என்றும்
சிந்தித்ததில்லையே...

உன் முகம் கண்டு
தொடங்கிய என் நாட்கள்
இனி இருளுக்கு இரையா?

என் கணவா
நீ  வெறும் கனவா ?

என்னை விட்டு நீயும்
பிரிந்திட துணிந்தாய்...
பட்டுப்பூச்சியாய்...

சிறகுகள் எனக்கில்லையே
உன்னை தொட்டு மீட்டிட....

பூமியின் சுழற்சி
காலத்தை தின்றாலும்

இனி வரும் என் காலம்
உன் நிழல் தேடும்
இறுதி வரைக்கும்...

உன் வாசனை தேடி
என் கால்களும் போகும்
கண்ணா

தோழனாய் இருந்து
தோல்விகள் பகிர்ந்தாய்
நான் வாழ்வேன் இனியும் உன்னால்...

யாரை நான் குற்றம் சொல்வேன்
நெஞ்சமே...
என் விழிகளில் உன் நினைவுத்துளி..

முதல் முறை பார்த்தோம்
இதயத்தால் இணைந்தோம்

அந்நாள் மீண்டும்
வேண்டுமடா...

கனவுகள் சேர்த்தோம்
காலத்தை ரசித்தோம்

அன்பா உன்னுடன் நான்
முழுமைடா...




No comments:

Post a Comment