Jan 11, 2011

இளமை வரம்..

நிலாவை கையிலெடுக்க
ஆசை கொண்டது
நீயென்ற சிறையில்
நான் அடைபட்ட போது தான்....

நான் நம்பாத கடவுள் கூட
உண்மையென்று தோன்றியது
நான் நினைத்த நொடியில்
நீ கண்ணில் பட்ட போது தான்..

கொட்டும் மழையோடு நான்
நனையத் துடித்தது
ஒற்றைக் குடையோடு
நீ வந்த போது தான்....

எப்போதும் பழகிய மாமர நிழலில்
உட்காரத் தோன்றியது
உன்னோடு நான் கண்ட
சந்திப்பின் போது தான்..

இறப்பு என்பதை
நான் வெல்லத் துடித்தது
மறுப்பேதும் சொல்லாமல்
நீ முத்தமிட்ட போது தான்..

தூக்கம் வெறுத்த என் விழிகள் இரண்டும்
போர்வைக்குள் புதையக் கேட்டது
கனவாய் வந்து நீ
கலகம் செய்த போது தான்....

அம்மாவின் மடியோடு
முடிந்திருந்த என் இளமை
நிமிர்ந்தொரு முகம் பார்த்தது
நீ என்னை எதிர் கொண்ட  போது தான்....

தமிழின் உயிர் மெய்யை
நேசிக்க முடிந்தது
நீயென்ற ஒரு கவிதையை
வாசித்த போது தான்....

பூக்களின் வாசனை
கடல் அலை ஸ்பரிசம்
யாவும் பிடித்தது
நீ வந்து கை கோர்த்த போது தான்...

மொழியால் சொன்னாலும்
புரியாத எனக்கு
மௌனம் பழகியது
நீ கோபப் பட்ட போது தான்...

நிதானம் மறந்த
வாழ்க்கையில்
என்னை நின்று காதலிக்கச் சொல்லியது
நீ ஒருத்தி மட்டும் தான்....

வாழ்வானாலும் சாவானாலும்
உடனிருக்க ஆசை கொண்டது
உன் கை விரலால்
நீ என் தலை கோதிய போது தான்...

அடிக்கடி கேட்பாயே
'என் மீது காதல் வந்தது எப்போதெ'ன்று....
இப்போது புரிகிறதா..

நீ செய்த ஒவ்வொன்றிலும்
உனக்காக நான் தேய்ந்தது?
நான் வாங்கி வந்த
இளமை வரமே...
வரமாகவும் வந்துவிட்டு

தொலைவில் நிற்கிறாய்...

வண்ணமில்லாத ஒரு காட்டில்
படைக்கப்பட்ட ஓவியனாய்
நான் தவித்துக் கிடக்கிறேன்!!!

6 comments:

  1. "மொழியால் சொன்னாலும்
    புரியாத எனக்கு
    மௌனம் பழகியது
    நீ கோபப் பட்ட போது தான்..."



    நன்றாக உள்ளது..

    Ram

    ReplyDelete
  2. நிதானம் மறந்த
    வாழ்க்கையில்
    என்னை நின்று காதலிக்கச் சொல்லியது
    நீ ஒருத்தி மட்டும் தான்....

    வாழ்வானாலும் சாவானாலும்
    உடனிருக்க ஆசை கொண்டது
    உன் கை விரலால்
    நீ என் தலை கோதிய போது தான்...

    ReplyDelete
  3. nalla improvement theridhu... innum nalla vara ennoda vazhthukal

    ReplyDelete
  4. நீ செய்த ஒவ்வொன்றிலும்
    உனக்காக நான் தேய்ந்தது?
    நான் வாங்கி வந்த
    இளமை வரமே...
    வரமாகவும் வந்துவிட்டு

    I like these lines.. Fantastic..

    ReplyDelete
  5. வண்ணமில்லாத காட்டில் ஓவியன்
    நல்ல உவமை

    ReplyDelete
  6. வாழ்வானாலும் சாவானாலும்
    உடனிருக்க ஆசை கொண்டது
    உன் கை விரலால்
    நீ என் தலை கோதிய போது தான்

    Fantastic.very nice lines and nice love.

    ReplyDelete