Feb 2, 2011

அழியாத தழும்புகள்

அன்பே அகிலமே என்
ஆசை வளர்த்துக் கிடந்ததும்
அழகே உன்னைக் காண
தவம் செய்தேன் என்றதுவும்...
மலர் மீது நீ தூங்க
நந்தவனம் நான் வளர்ப்பேன் என்றதுவும்....
சொல்லொன்று நீ பேசி
என் ஆயுள் நீண்டதுவும்...
மௌனமாய் நீ கிடக்க
உன் காது மடல் தொட்டதுவும்...
கவிதை செய்து நான் கிடக்க
காதலி நீ ரசித்ததுவும்....
வார்த்தையால் சொல்ல முடியா
மோகம் பொங்கி வழியும் போது
நகம் கடித்து நகர்ந்ததுவும்....
நானும் நீனும் என்ற பேதம்
மறந்து நாம் மகிழ்ந்ததுவும்...
உனைக் காணாத பொழுதெல்லாம்
நிலவில்லா ஒரு இரவில் சிக்கிக் கொண்ட குழந்தையாய்
சிணுங்கியே செத்ததுவும்....
சகி உன் கூந்தல் நுனியில்
என் உயிரை நான் முடிந்ததுவும்....
உன் சுவாசம் தொடுகிற
அருகாமையை உணராத நாளெல்லாம்
தென்றல் இல்லா ஒரு கிரகம்
எனை சூழ்ந்தது போல் வரண்டதுவும்...
கண்களால் நீ எனை
தின்றுவிடுகிற போது கூட
புன்னகையால் உன் இதழை நான்
மென்று செரித்துத் திரிந்ததுவும்....
நீல வானம் கூரையாக...
கொட்டும் மழை சாரலோடு
உன் கன்னத்தில் ஈர முத்தம் பதித்ததுவும்
கோபப் பட்டு நீ முறைக்க
பொழிந்த மழை சுட்டதுவும்....
எல்லாம்...
என்னுயிரே
எனக்குள்ளே தழும்புகளாய்
தங்கிவிட

எப்படி நான் கண்டு கை கோர்ப்பேன்
இன்னுமொரு முகம்...?
மணந்த ஒருவனுக்காய்
நீ மறந்தாய் உன் என்னை....

ஆற்றாத வலி எல்லாம்
ஆழமாய் கிடந்து தொலைக்க...
துரோகமொன்று செய்யவா...
ஒன்றும் அறியாத
இன்னுமொரு ஜீவனுக்கு????



7 comments:

  1. super......nice usage of words........keep it up akka...athithya

    ReplyDelete
  2. நீல வானம் கூரையாக...
    கொட்டும் மழை சாரலோடு
    உன் கன்னத்தில் ஈர முத்தம் பதித்ததுவும்
    கோபப் பட்டு நீ முறைக்க
    பொழிந்த மழை சுட்டதுவும்....


    Superb!!!

    ReplyDelete
  3. அருமையான கவிதை கவிபாரதி!!! உங்களை ஒரு முறை நேரில் பார்க்க ஆசை!

    ReplyDelete
  4. எப்படி நான் கண்டு கை கோர்ப்பேன்
    இன்னுமொரு முகம்...?
    மணந்த ஒருவனுக்காய்
    நீ மறந்தாய் உன் என்னை....

    ஆற்றாத வலி எல்லாம்
    ஆழமாய் கிடந்து தொலைக்க...
    துரோகமொன்று செய்யவா...
    ஒன்றும் அறியாத
    இன்னுமொரு ஜீவனுக்கு????


    hey semaiya iruku indha lines..

    நீல வானம் கூரையாக...
    கொட்டும் மழை சாரலோடு
    உன் கன்னத்தில் ஈர முத்தம் பதித்ததுவும்
    கோபப் பட்டு நீ முறைக்க
    பொழிந்த மழை சுட்டதுவும்....

    migavum pidithirukirathu.....

    ReplyDelete
  5. எப்படி நான் கண்டு கை கோர்ப்பேன்
    இன்னுமொரு முகம்...?
    மணந்த ஒருவனுக்காய்
    நீ மறந்தாய் உன் என்னை....

    very nice akka........... sathya

    ReplyDelete
  6. awesome... gud going.. :)

    ReplyDelete