Feb 18, 2011

மண்ணில் புதைந்த உணர்வுகள்...

உலகம் உருவான
முதல் நொடியே
காதலென்ற ஒரு வார்த்தை
நிலம் கிழித்து வந்திருக்கும்...

அது பூமி மீது முளைத்து வரும்
ஜீவனுக்கெல்லாம்
கருவறையில் தொடங்கும்
கட்டாயப் பாடம்....

மனதோடு மனம் செய்யும்
ஒரு வித போராட்டம்...

உன் உடலோடு அட்ரினலின்
போடுகிற அட்டகாசம்....

நீ என்னதான் மறுத்தாலும்
முடியாது போகும்..

முன்னூறு முறை
முயன்றும் மறக்காது
உன்னை தொல்லை செய்யும்...

வேண்டுமென்றே நீ சிக்கிக் கொள்ளும்
ஒருவித நரகம்...

எத்தனைதான் பட்டாலும் தணியாத
அநியாய தாகம்...

மௌனமும் பேசும்
மர்மம் செய்யும்...

இரு இழியும் ஒரு பார்வை
பார்க்கிற மனித இயல்பை....
மாற்றி
நீ விரும்புகிற முகமிருக்கும்
பக்கமெல்லாம் உன் ஒரு விழி
ஓடித் திரியும்..

கனவாகவும் வந்து
கண்ணுறக்கம் கலைத்து விட்டு
காற்றாக மறையும்
காதல் சாயம்..

கவியாய் நீ மாறி
எழுதுகிற சொல்லில் எல்லாம்

பரதிபலிக்கும்
மாயம்....

வயிற்றுக்குள் பட்டுப்பூச்சி
கட்டும்..

இதயத்துடிப்புக்குள்
ஒரு பெயர் சேர்க்கும்!

இத்தனையும் செய்துவிட்டு
இன்னும் ஒன்று செய்யும்....

ஆயிரம் பேர் தடுத்தாலும்
எதிர்த்து நின்று சிரிக்கும்

காதல் வந்தால்
பைத்தியம் போல் பேசத் தோன்றும்....

யாரேனும் கண்டுவிட்டால்
அடி மனதில் கண்ணீர் பொங்கும்..

உருகி காதல் செய்யும் தருணம்
சாத்தியமற்ற எல்லாமே
சுலபமாகும்....

சூரிய ஒளியும்
பௌர்ணமி நிறம் பூசிக்கொள்ளும்...

அவசியமில்லா அவஸ்த்தை
என்று உணர்ந்திட
முடியாத சூழலில் தள்ளி
ஏளனமாய் பார்க்கும்
காதல் பிணி....

ஏன் என்றே தெரியாத போதும்
மனித இனம்
மாட்டிக் கொள்ளும்

சூனியம்.....


சுகமாய் தொடர்ந்துவிட்டால்
தொல்லை இல்லை....

சோகமாய் முடியும்
ஒவ்வொரு காதலும்...

மக்கிடாத  ஒரு பொருளாய்
மண்ணோடு திணறிக் கிடக்கும்

மறுஜென்மத்தில் நம்பிக்கை கொண்டு....
மீண்டும் எழ எண்ணிக் கிடக்கும்.....



3 comments:

  1. "இரு இழியும் ஒரு பார்வை
    பார்க்கிற மனித இயல்பை....
    மாற்றி
    நீ விரும்புகிற முகமிருக்கும்
    பக்கமெல்லாம் உன் ஒரு விழி
    ஓடித் திரியும்"



    Superb!

    ReplyDelete
  2. சுகமாய் தொடர்ந்துவிட்டால்
    தொல்லை இல்லை....

    சோகமாய் முடியும்
    ஒவ்வொரு காதலும்...

    மக்கிடாத ஒரு பொருளாய்
    மண்ணோடு திணறிக் கிடக்கும்

    மறுஜென்மத்தில் நம்பிக்கை கொண்டு....
    மீண்டும் எழ எண்ணிக் கிடக்கும்.....


    Migavum unmayaana varigal... un karpanikku vaaname Yellai...

    ReplyDelete
  3. உருகி காதல் செய்யும் தருணம்
    சாத்தியமற்ற எல்லாமே
    சுலபமாகும்....

    very nice ma......

    ReplyDelete