Mar 13, 2011

ஆதலால் உன்னைப் பிடிக்கும்

அருகருகே அமர்ந்திருந்த போதும் 
கண்ணியம் மாறாது பேசுவாய்..

என்னைப் போல் யாருமில்லை என்பாய் 
எனக்காக எனில் எதுவும் செய்வதாய் சொல்வாய்...  


நான்  உன் மீது கோபம் கொண்டாலும்
வீடு வரை வந்து என்னை
பத்திரமாய் விட்டுச்செல்வாய்....


உன்னை சந்திக்க வரும்
ஒவ்வொரு முறையும்
தாமதமாய் வருகிற என்னை
முத்தம் கேட்டு இம்சிப்பாய்....

உன்னை பார்க்காத நாட்களில்
பத்து முறையேனும்
தொலைப்பேசியில் அழைப்பாய்....
நான் உன்னை "தொல்லை" என்றாலும்
தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பாய்...

நடுஇரவில் நான் எதிர்பார்க்காத போது
என் நெஞ்சில் தலை புதைத்து தூங்கு என்று
குறுஞ்செய்தி கொடுத்து
கூச்சம் கொள்ள செய்வாய்....

நான் உன்னுடன்
இல்லாத தருணங்களில்
நட்சத்திரம் எல்லாம்
உதிர்ந்து விடுவதாய் கவிதை எழுதுவாய்...

தூரல் நின்றாலும்
மிஞ்சி இருக்கிற ஈரம் போல
காதலின் வார்ப்புகள் முடிந்த பின்னும்
உன்னோடு மிஞ்சி இருக்கும் தீரா தேவைகள்..

உன்னுடனான என் பொழுதுகள்
நீள வேண்டுமென்று ஆசைப்பட வைக்கிற
உன் குறும்புத்தனங்கள்...

அவசரமாய் கிளம்பி வந்ததில்
நான் சரி செய்ய மறந்த என் கூந்தலை
சரி செய்யும் சாக்கில்

நீ என் முகம் தடவும் நொடிகளில்
நான் தடுக்கவும் முடியாது
தாங்கவும் முடியாது உடைந்து போன காலங்கள்....

நான் நகம் வெட்ட மறந்து போனேன்
நீ பற்களால் கடிக்கும் சாக்கில்
என் விரல்களை
முத்தமிட்டாய்...

அந்த மோகம் வழிகிற நிமிடங்கள்...

பேருந்தில் எப்பொழுதும் என் பின்னல்
நிற்கும் உன் மீது
சாய்ந்து கொள்ளத் துடிக்கிற
என்னை கட்டுப் படுத்த முடியாது
நான் உனக்காக உருகிய மாலைப் பொழுதுகள்..

எல்லாம் அழகானவை....

நீயும் தான்!






6 comments:

  1. wow. really super .......
    ROMBA PIDICHURUKU ....
    SOLA VARTHAIGALE ILA.
    ANTHA ALAVU PIDICHURUKU!
    நடுஇரவில் நான் எதிர்பார்க்காத போது
    என் நெஞ்சில் தலை புதைத்து தூங்கு என்று
    குறுஞ்செய்தி கொடுத்து
    கூச்சம் கொள்ள செய்வாய்....
    அவசரமாய் கிளம்பி வந்ததில்
    நான் சரி செய்ய மறந்த என் கூந்தலை
    சரி செய்யும் சாக்கில்

    நீ என் முகம் தடவும் நொடிகளில்
    நான் தடுக்கவும் முடியாது
    தாங்கவும் முடியாது உடைந்து போன காலங்கள்....

    ELA LINE UM PODANUM.
    ATHU ROMBA LENGTH AH POGUM.
    SO VENDAM.
    VERY VERY VERY NICE.........

    ReplyDelete
  2. romba romba romba rasikum padi iruku... padikaiyil ennai anda kavidaikul kondu selgirathu..!!!!!

    ReplyDelete
  3. உன்னை சந்திக்க வரும்
    ஒவ்வொரு முறையும்
    தாமதமாய் வருகிற என்னை
    முத்தம் கேட்டு இம்சிப்பாய்....


    உன்னை பார்க்காத நாட்களில்
    பத்து முறையேனும்
    தொலைப்பேசியில் அழைப்பாய்....
    நான் உன்னை "தொல்லை" என்றாலும்
    தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பாய்...


    நடுஇரவில் நான் எதிர்பார்க்காத போது
    என் நெஞ்சில் தலை புதைத்து தூங்கு என்று
    குறுஞ்செய்தி கொடுத்து
    கூச்சம் கொள்ள செய்வாய்....

    ReplyDelete
  4. //உன்னருகில் என் பெயர் எழுதியது
    காதல்
    அதை கிழித்து வேடிக்கை பார்த்தது
    வாழ்க்கை //

    No words to say
    என்ன ஒரு கவிதை

    ReplyDelete
  5. Kavi Bharathi.. Naan solla ninaitha anaithaiyum unnudaya mattra nanbargal solivittanar,...

    Enna solla..
    Eppadi solla...
    Theanil karkandai ninaithar pondra unarvu
    unkavithaigalai vasikindra poluthu..

    Arumayaana varigal, yatharthamaana mozhi... :)))

    ReplyDelete
  6. wonderful akka...athithya

    ReplyDelete