Sep 10, 2011

சொல்லாயோ உந்தன் சோகம்

அழகான பேச்சுக்காரி 
மல்லிப்பூ மனசுக்காரி 
நிலவரும்பா நீ சிரிக்க 
மறந்ததடி உலகம்....

மருதாணி சிவப்புக்காரி 
மனச அல்லும் திருட்டுக்காரி
நதிபோல நீ பொழிய 
இனிக்குமடி மரணம்... 

சொட்டசொட்ட பொழிந்து விட்டு 
கிட்டத்தட்ட நின்ற பின்னும் 
மனசுக்குள்ள 
பொழிந்து கொட்டும் மழையடி.... 

வேண்டாமென்று மறுத்தாலும் 
கூடாதென்று நினைத்தாலும் 
திரும்பி பார்க்கச்சொல்லி அழும்
மழலையடி... 

உன் சோகம் எதுவானாலும்  
என் தோள்கள் அதை சுமக்கும் 
உன் பாதம் போகும் தூரம் 
என் பார்வை நிறைந்திருக்கும்....

நீ வந்து பழகிய காலம் 
என் வாழ்க்கையின் மழை காலம் 
எதை மறந்தாலும் 
மறக்காத காதல் காலம்... 

நீ வருவாயென்று தெரியாதே
உன்னோடு தொடரும் எந்தன் பயணமென்று தெரியாதே
உனக்காக உயிர் கொள்வேன் என்று கூட தெரியாதே
என்னை பிரிந்து நீ போனால்
நெஞ்சமதை தாங்காதே...

சுற்றும் பூமி எப்போதும்
யாருக்காக என்றாலும்
சுற்றுவதை நிறுத்தாதே
சோகமெல்லாம் ஒரு நாளில்
சாயம் போகும் வருந்தாதே 

உனக்காக எப்போதும்
நான் இருப்பேன் இது நிஜம்
கண்ணின் மணி நீ அதனால்
சொல்லாயோ உந்தன் சோகம்...












1 comment:

  1. நீ வருவாயென்று தெரியாதே
    உன்னோடு தொடரும் எந்தன் பயணமென்று தெரியாதே
    உனக்காக உயிர் கொள்வேன் என்று கூட தெரியாதே
    என்னை பிரிந்து நீ போனால்
    நெஞ்சமதை தாங்காதே...

    semaiya iruku kavibharathi ;) ;)

    ReplyDelete