Sep 9, 2013

இது கனவின் வழியே வாழும் உலகம்

நீ என் உயிராய் இருக்கக் கேட்பேன்
பார்த்துப் பார்த்து பழகக் கேட்பேன்
நீயும் நானும் நடந்து போக
பாதை இன்னும் விரியக் கேட்பேன்...

நினைத்து நினைத்து சிரித்துக் கொள்வேன்
நிலாவில் குடும்பம் நடத்திக் கொள்வேன்
சொல்லும் சொல்லில் யாவும் யாவும்
உனது பெயரே கலந்து கொள்வேன்....

அன்பில் சரிந்து
அன்பில் எழுந்து
அன்பில் நாளும் சேரலாம்...

அன்னை போல என்னை நீயும்
மடியில் கிடத்தலாம்..

களவு மறந்த பிள்ளையாகி
நானும் பழகலாம்....

ஆடை கொண்டு மூடிக் கொண்டாய் 
நீயும் எனக்கான மடல்  
உன்னில் மூழ்கி 
உன்னில் எழுவேன்
நீ... நான் விரும்பும் கடல்.... 

உன் வருகையாவும் மயிலறகு போல 
அதன் வருடல்கள் யாவும் சுகம்... 
நீ வந்து பேசும் மொழியில் 
எனது ஆயுள் நீளும் ஒரு யுகம்.... 
 
உனது பெயரில் எனது பெயரை 
தேடிப் பார்க்க ஆசையுண்டு.... 

உனது உள்ளங்கையில் என் உயிரை ஒழித்து 
வாழ்ந்து பார்க்க ஆசையுண்டு... 

பூக்கள் நிறைந்த சாலை ஓரம் 
உன்னைத் துரத்த ஆசையுண்டு... 

நீ நினைக்கும் முன்பே உன் தேவை அறிந்து
உன்னை காதல் செய்ய ஆசையுண்டு

நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் 
என் காதலை நீ நினைத்திடு..
உன் கண்ணில் நீரே இல்லா
உலகம் காட்டுவேன் நீ வந்திடு..
 










2 comments:

  1. You are blessed. . . Don spoil that. . Write more and more. . . I wish if i have someone to love me like this. . . <3

    ReplyDelete
  2. காதல் எனும் அரிய உலகம் காண
    காலமெல்லாம் காதத்திருப்பேன்
    உயிரே உந்தன் இடம் தேடி
    ஓடோடி வந்திடுவேன்

    அன்பில் சரிந்து
    காதலில் உருகி
    உயிராய் உயிரில் கலந்திடவே <3

    கவிதை அருமை ராஜி

    ReplyDelete