Oct 5, 2010

மல்லிகை உயில்..

உலகில் நான் இன்னும்
உயிர் கொட்டி போகாது இருப்பதற்கு-

அன்னமே நீ தான்
மாபெரும் காரணம்!

இல்லையேல் எனக்கேது
இந்த உயிர் வரம்??

தாய் தந்தை
முகம் அன்றி

வேறெதுவும் அறியவில்லை..

தமிழ் மொழி மட்டும்
போதுமென
தவம் செய்திருந்த

என்னை...
ஒரு நொடி பார்வையில் உருக்கி போட்டாய்..

மலர் பல வந்து
என் நாசி தொடுகையில்

மல்லிகையே நீயல்லவா..
என்னை மிரட்டிச்சிரிதாய்??

மெதுவாய் பறித்தாய்!!!

உன் பார்வையில்..
தொடுதலில்..

காதலை புரிய வைத்தாய்!

உனது பல்லாங்குழி பார்வையும்..
சடுகுடு பேச்சும்

சாவிலும் மறக்காது!

காற்று உன் கூந்தல் கலைத்து
மேன்புரும் போதெல்லாம்

நானும் காற்றாய் மாறியதுண்டு!

இன்று நிகழ்காலம்
நெஞ்சுக்குள் நெருப்பை கட்டும் போது..

சிரியென ஏவுகிறாய்

அன்பே..

உன்னை
உன் கன்னக் குழியை

நினைவு படுத்தி தேய்கிற நிலா மீது சத்தியமாய்...
சொல்கிறேன்..

நீ இல்லாத இத்தருணம்...

என்னை கூறு போட்டு
கொல்கிறது தனிமை..

சிரிக்க சொல்லாதே!

இறக்க சொல்

நீ என்கிற அந்த ஒற்றை
நினைவோடு...

மரணத்தை அள்ளி முத்தமிடுவேன்!

2 comments:

  1. Hi This is Adhi! Good.. keep writing

    ReplyDelete
  2. nice...the creation looks amazing ;);)

    ReplyDelete