Oct 27, 2010

மாயக்கவிதை

அத்து மீறல்கள் இல்லாத
அமைதியான தொடுதல்

ஆளை விழுங்கும் பார்வை..

ஆசையாய் பேசும் உன் கீச்சுக்குரல்..

நெற்றியை வளைத்த ஒற்றை முடி..

பேச்சின் இடையே என் காதோரம்
இதழ் பதிக்கும் குறும்பு

எப்போதும் கட்டிப்பிடித்து இம்சை செய் என்பது போல்
ஒரு தோரணை..

மாதம் ஒரு முறை
உன் உள்ளங்கையோடு இடம் பிடித்து விடுகிற
மருதாணி வாசம்..

மிட்டாய் வேண்டுமென்று  அடம் பிடித்து
பின்
பாதி தின்று மீதம் தருவாயே
அந்த பகிர்வு..

தூக்கம் தழுவும் நடுநிசியில்
உன் அருகில் உறங்க ஆசை என்று
குறுஞ்செய்தி கொடுத்து
உருக வைப்பாயே..
அந்த காதல்..

ஒரு முறை தொட்டு பார்க்க
முன்றதும்..
முடியாது என்று மறுப்புககொட்டுவாய்
அந்த கண்ணியம்..

தெருவில் என்னை உரசி நடப்பாய்..
உன் கரம் பிடித்தால்..
கூடாது என்று நடிப்பாய்..
மீறி பிடித்தால்..
முகம் சிவப்பாய்...
அந்த நாணம்..

யாரேனும் என்னோடு சிரித்துப் பேசிவிட்டால்...
அந்த நாள் முழுதும் நீ படும் அவஸ்த்தை

பேருந்தில் என்னை ஒட்டி உட்கார்ந்து..
மெதுவாய் "ஐ லவ் யு" என்பாய்...
அந்த கள்ளத்தனம்....

இத்தனை வயதிலும்
குச்சி ஐஸ் கேட்டு
நீ காட்டும் குழந்தைத்தனம்

பிடித்திருக்கிறது..

இன்னும் சொல்ல வேண்டுமா..

சொல்லச்சொல்ல தீராத
மாயக்கவிதை நீ..

உன்னை எழுதவே..
கவியாய் நான்...

1 comment: