Nov 27, 2010

உணர்திடு மனமே..

நாளைய விடியல்
உனக்கு வசந்தமாய் வரும்

                          உனது கைவிரல்களில்
                          பூமி சுழலும்...

நம்பிக்கை வை மனமே...

                         நடப்பவை நான்கும்
                         நல்லதே தரும் என

நிம்மதி கொள் மனமே....

விதைத்திட்ட விதை எல்லாம்
நல்விருட்சமாகும்

                       அதுவரை சிரி மனமே...

உயிரோட்டம் கொண்ட இளமை இது
இன்று
வலிகளும் ஏன் மனமே...

                          வாசனை நாட்கள் விரைவில் வரும்...
                          கண்ணீர் துடை மனமே..

வேடிக்கைப் பார்க்கும்
மனிதர் கூட்டமது
வெறும் காகிதக் கத்திகள்..

                       உன்னை பிளக்கப் போவதில்லை...
                       விமர்சனம் மற மனமே....

பார்வையில் இகழும் சிலர்
வீண் பேச்சில்
வீழாதிரு மனமே...

                      சிற்றொரு நொடியில் நீயும்
                      சிகரம் தொட
                      சிறகுகள் விரி மனமே....

கனவுகள் கண்டு
வாழ்பவர் இடையே..
நிஜமாய் வாழ்வதென்று
சபதம் கொள் மனமே...

                        சாவு வரை சமர்த்தாய்
                        அமர்ந்து வாழ்வை படி மனமே...

நட்பைக் காட்டி
நடிக்கும்
சிலரோடு சிக்காது இரு மனமே....

                     தாழ்ப்பாள் ஏதும்
                     காற்றுக்கு அடுத்ததாய்....
                     மனதுக்கு மட்டும் தான் இல்லை
                     சுதந்திரமாய் சுற்று...

சுகம் கோடி உண்டு
உலகில்
பதம் பிரித்து ரசித்திடு
என் மனமே.....

பிரபஞ்சம் முழுதும்
விரிந்து கிடக்கும்
வாய்ப்பை அறிந்திடு...

வாழ்கையை வாழ்ந்திடச்சொல்லி
தோள் தட்டும்

இயற்க்கை....

2 comments:

  1. seriously motivating!

    ReplyDelete
  2. வேடிக்கைப் பார்க்கும்
    மனிதர் கூட்டமது
    வெறும் காகிதக் கத்திகள்..

    உன்னை பிளக்கப் போவதில்லை...
    விமர்சனம் மற மனமே....


    அழுத்தமான வரிகள்!

    ReplyDelete