Nov 26, 2010

எனக்குப் பிடித்த கவிதை...

நான் எனப் படுவது
உன்னையும் சேர்த்துத் தான்
எத்தனை வரிகளில் நான்
கவிதை செய்தாலும்...

எனக்குப் பிடித்த கவிதை..
உன் சிணுங்கள் தான்!

குற்றம் ஏதும் செய்தால்
என்னை குழந்தை என்பாய்
மற்ற வேளைகளில்..
மகாகவி என்பாய்...

உன்னால்..
உனக்காக...
உன்னோடு மட்டும்
நான் கவியாவதில் ஆனந்தம்...

நோயேதும் என் உயிர் கடைந்தால்
மருந்துகளால்
நலமாகாது...
உன் கண்கள் வார்க்கிற நீர்த்துளி போல்
மருந்தொன்று ஆகாது!

உன்னோடு நானிருந்த
பால் நொடிகள்
மரணப் படுக்கையிலும் மறக்காது...
இப்போது கூட..
இதயம் உன்னை மென்று தான்
சக்தி கொள்கிறது!

இரு நிமிடம் உன்
கை பிடித்து நின்றதெல்லாம்
கரும்பாய் இனித்து கவிதை தருகிறது!

உன் புன்னகை நதியில்
மூழ்கி எழுந்த போது
என் பாவங்கள் கரைந்து போனது...

காதல் என்ற புண்ணியம் ஒன்று
புதிதாய் என்னுள் கலந்து போனது!!!

ஓரிரு நாட்கள்
காணாது போனால்
கலங்கி இருப்பேன்
மறுநாள் கண்டதும்...

இந்த விழி தானே
என்னை தள்ளி இருந்து எரித்த விழி
என்று...

வேகமாய் உன்னை அணைத்து
அழுத கணமெல்லாம்...
மறப்பதற்கு அப்பாற்ப்பட்டது!

உன் காது மடல் ஓரம்
சிறு இடம் கொடு..
காலத்திற்கும் அதில் என்
உயிர் ஊற்றி வைப்பேன்...

உன்னை போல் ஒரு வரம்
நான் எந்த பிறவியில்
வாங்கினேனோ....
யோசித்தாலே பரவசம்!

நீ உடன் இருந்த போது..
பேசாது கடந்த நேரங்களுக்காய்...
அழுகை வருகிறது!

நீளமான வானம்
வெறித்துப் பார்க்கும்
வெய்யில்...
என் தோளோடு உலகம் மறந்து
விரல் கோர்ப்பாயே..
ம்ம்ம்...
மறக்காது!! மறக்காது!!

"நில்" என்று கெஞ்சும் என்னை...
"தள்" என்று சொல்லும் உன்னை

எப்படி துறப்பேன்...????

ஒரு போதும் மறக்காது
உன்னை தின்று காதல் வளர்த்த
நினைவுகள்...

இறுதியாய் ஒன்று..

காதல் கசப்பாகி..
கண்ணீர் விழுந்த போதும்...
கடைசி வரை
நேசம் ஒட்டி இருக்கும்
என் விழிநீரோடு!!!

5 comments:

  1. காதல் கசப்பாகி..
    கண்ணீர் விழுந்த போதும்...
    கடைசி வரை
    நேசம் ஒட்டி இருக்கும்
    என் விழிநீரோடு!!!

    Unmai!!! migavum azhagaana kavidhai...

    ReplyDelete
  2. ஓரிரு நாட்கள்
    காணாது போனால்
    கலங்கி இருப்பேன்
    மறுநாள் கண்டதும்...

    இந்த விழி தானே
    என்னை தள்ளி இருந்து எரித்த விழி
    என்று...nice lines


    "எனக்குப் பிடித்த கவிதை" enakum migavum pidithirikiradhu....


    regards,
    SANTHA KUMAR!!!

    ReplyDelete
  3. நோயேதும் என் உயிர் கடைந்தால்
    மருந்துகளால்
    நலமாகாது...
    உன் கண்கள் வார்க்கிற நீர்த்துளி போல்
    மருந்தொன்று ஆகாது !!
    un kavidhai padukaiyil yendrum iruka aasai....

    ReplyDelete
  4. எனக்கும் பிடித்தது :)

    ReplyDelete
  5. hello madam!!! nice one... missing u a lot... keep doing.. congrats

    ReplyDelete