Nov 25, 2010

நீ - நான் - நாம்....

இன்னும் வாராத அந்த அழகான நாட்களை
கனவுக்குள் பதுக்குகிறேன்...

நீ வந்தவுடன் உன்னோடு வாழ..!

இனிப்பும் கரிப்புமான
ஒரு இயல்பான வாழ்க்கை..
அந்த நாட்களில்
எனது உள்ளங்கையோடு
உனது கன்னங்கள்..

நினைத்தால் முத்தமிடும் தொலைவில் நீ...
உனக்கு பிடித்தாற்போல்
முற்றிலும் மாறிய நான்..

சரியென்று மட்டும் சொல்லும்
என் செல்லக்கிளி நீ..

உன் சிரிப்புகளுக்காய்...
ஏங்கிக் கிடக்கும் நான்...

உறக்கம் மறந்த இரவுகளில்
என்னைத் தீண்டும் காற்றாய் நீ...

உன்னை முழுதும் விரும்புகிற
அடிமையாய் நான்..

என் கவிதைகளின் தலைப்புகளாய் நீ
உன்னை எழுதவே கவியாய் நான்....

எப்பொழுதும் உன்னை விட அதிகமாய்
என்னை நேசிக்கும் நீ...

உன் நேசிப்புகளில் தொலைந்த மழலையாய் நான்..

பேச்சின் இடையே முத்தம் கேட்க்கிற
தேவதையாய் நீ...

முத்தத்தை நான் மீற..
முகம் சிவக்கும் அந்தியாய் நீ...

எப்பொழுதும் உன்னை இழுத்து
அழுத்தமாய் பார்க்கும் மிருகம் நான்..

"போ" என்று முறைக்கும் பொய் கோபம் நீ...

எதுவும் பிடிக்காத நேரங்களில்
உனக்கான தொல்லை நான்..

உயிர் கூட உடையும் படி
மறுப்புக்கொட்டும் தேனருவி  நீ...

ஆறுதல் தேடி நான்
அழுகும் போது என் அன்னையாய் நீ..

உன் அணைப்பில் தூங்கிவிடுகிற பிள்ளையாய் நான்..

என்றாவது மழை வந்தால்
என் வீட்டுக்குள் குடை நீ..

குடை மீறி கொட்டுகிற சில துளியாய் நான்....

சொல்லிக் கொண்டே போகலாம்
உன்னுடனான என் கனவுகளை...

என்னை பிடிக்குமென்று சொல்...

அழகாய் தான் இருக்கும்
உன்னைப் போல் ஒரு பூக்காடு என்னோடு வாழ வந்தால்....

1 comment:

  1. nalla irukku....

    ஆறுதல் தேடி நான்
    அழுகும் போது என் அன்னையாய் நீ..

    உன் அணைப்பில் தூங்கிவிடுகிற பிள்ளையாய் நான்..

    azhagaana varigal...

    ReplyDelete