Nov 25, 2010

நீயெனப்படுவது யாதெனில்

 மழையோடு நான் நனைய நேர்ந்தால்
எனக்கான ஒற்றை குடை..

சாலையில் நடக்கும் போது
என் நாசி உரசும் மல்லிகைப் பூ...

சோகமாய் கவிதை செய்தால்
துளிர்த்து விழும் அகரம்..

கோபமாய் பேசிவிட்டால்
மனதுக்குள் மலையருவி...

சந்தோஷமாய் நான் இருப்பின்
அழகுபடுத்தும் புன்னகை...

வேகமாய் நான் விரைந்தால்
என்னை நிதானிக்கச் சொல்லும் வேகத் தடை..

தாகமாய் நான் இருக்கும் தருணம்
தொண்டைக்குள் ஊரும் அமுதம்..

தூக்கம் துடைத்த இரவுகளில்
என் கண்கள் கொண்டாடும் விழா...

மௌனமாய் நான் இருந்தால்
கேட்கச் சொல்லி அடம்பிடிக்கும் இசை..

மோகம் கொண்டு பார்க்கும் போது
திகட்டாத மிட்டாய்....

நீயெனப் படுவது...
என்னை பொறுத்தவரை
இந்த அகிலம் கொண்ட அத்தனையும்....

1 comment: