May 5, 2011

காலங்கள் கடந்து.....

அழகாய் சிரித்தபடி
ஏதேதோ சொன்னபடி...

என்னவெல்லாமோ தமக்குள்ள பேசிக்கொண்டபடி
காரணங்கள் பல கொண்டு சண்டை போட்டபடி....

சமாதானமாய் ஒன்றை ஒன்று பார்த்து சிரித்தபடி....
அவசரமாய் வாகனத்தில் போகிறபடி.....

உயிர் உருகி சில பேர்கள் காதலித்தபடி....
யார்யாரையோ நினைத்து கண் இமைக்காது யோசித்தபடி....

விலங்குகள் தமக்குள் நட்பு ஒப்பந்தம் போட்டபடி....
அன்று பூத்தது போல்
பூக்கள் எல்லாம் பனித்துகள் தாங்கியபடி....

உலகத்தின் அமைதி எல்லாம் கொண்டு வந்து
கொட்டி வைத்ததொரு அழகில்

அத்தனை பொம்மைகளும்
தமக்கான வாழ்கையை வாழ்ந்து கொண்டே இருக்குமா.....

காலங்கள் கடந்து.....
மொழிகள் கடந்து.....

இதயத்துள் ஏக்கம் பூக்கிறது
இனி நானும் அப்படியே
உறைந்து போகலாகாதா என்று!

5 comments:

  1. voooow lovely........:)athithya.

    ReplyDelete
  2. இதயத்துள் ஏக்கம் பூக்கிறது
    இனி நானும் அப்படியே
    உறைந்து போகலாகாதா என்று!

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. நீ உரைத்தபடி,
    கவிதை வடித்தபடி,
    நீ நினைத்தபடி,
    அழகாய் வந்ததடி
    என் விமர்சனங்கள் !!!..

    ReplyDelete
  5. doing great da your poems instills me to write going great -usha

    ReplyDelete