May 8, 2011

நடுநிசி கவிதை

நித்திரை தொலைத்த
நடு இரவில்.....

கவிதை செய்ய எத்தனித்தேன்...

ஏதேதோ எண்ணங்கள் வந்து
எழுதுமாறு கேட்டுக்கொண்ட போதும்....

என் காகிதங்கள் உன் பெயரை மட்டும்
பச்சைக் குத்திக் கொண்டன..

நிலா வானம் நட்சத்திரம்
இத்தனைக்கும் இடையே....
நான் தொட்டு ரசிக்கும் உன்
தேன்முகம் மட்டும்
என் நெற்றிப் பொட்டில் ஒட்டிக் கொண்டது...

நான் வைத்த ஈர முத்தங்களும்
அதற்காக நீ சிந்திய சிவப்பு வெட்கங்களும்

எண்ணியப் பின்
வேறெதையும் எழுதுவது
கண்ணியமாய் படவில்லை...

ஒன்றுமே முடியாதென்று
ஒதுக்கிய என் சுற்றமெல்லாம்
நான் கவியானதை கொண்டாடும் போது

காதலே அது உன்னை
சாத்தியமானதென்று சொல்லாமல் இருக்க முடியாது...

எனக்கு உயிரூட்டியது அன்னை தான்
எனினும்
என்னை உருவாக்கியது நீயே அல்லவே....

உன்னை மென்மையாய் எழுத
எந்த பேனாவாலும் முடியாது...

மயில் தோகையில்
என் உதிரம் நிரப்பி
எழுதவா....

நம்மில் தடமிட்ட
காதலை...

உன் கூந்தல் அசைவுகளில்
நான் சிக்கித் திணறும் போதும்..

மீண்டும் மீண்டும் சிரிப்பாய்....

நான் மீள முடியாது
இறப்பேன்....

பூவே உன்
மௌனங்களும்
மலர்வுகளும்

எனக்குள் ஏக்கம் தந்த
நாட்கள் நகர்ந்தோடி....

என் மடி மீது நீ
சாய்ந்திருக்கும் இத்திருநாள் வரை.....

ஒவ்வொரு நிகழ்வும்...
ஒவ்வொரு கவிதை

ஆதலால்....
என் செவ்வனமே

நீ கவிதையால்  சொல்லித் தீராதவள்.....



3 comments:

  1. நான் வைத்த ஈர முத்தங்களும்
    அதற்காக நீ சிந்திய சிவப்பு வெட்கங்களும்

    nice lines.............

    ReplyDelete
  2. நான் வைத்த ஈர முத்தங்களும்
    அதற்காக நீ சிந்திய சிவப்பு வெட்கங்களும்

    எண்ணியப் பின்
    வேறெதையும் எழுதுவது
    கண்ணியமாய் படவில்லை...

    Awesome.. Ganiyam.. Super Raaji.. I would give my life to these lines.. Fantabulous..:)

    ReplyDelete
  3. ஆஹா ஆஹா.. அருமை!!
    பல நாட்களுக்கு பிறகு உணர்வுபூர்வமான ஒரு கவி..
    தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...

    ReplyDelete