Sep 17, 2011

வாழ்த்துரை

உள்ளிருந்து உன் நினைவுகள் 
துவம்சம் செய்த போதும் 
வருகிறேன் என்று வாக்களித்தேன் 

தோளோடு தலை சேர்த்து 
விரலோடு விரல் கோர்த்து 
கதை பேசிய காலமெல்லாம் 

தோழி நீ இல்லாத பொது 
என் தோலுரித்தது! 

சிறுகச்சிறுக சேமித்த காசெல்லாம் 
உண்டியலோடு காணாமல் போனால் 
சேமித்த சிறுவன் எப்படி அழுவான்.... 

அப்படித்தான் அழுதேன் நானும்.... 

கண்களில் கூடு கட்டி 
காத்திருந்த கனவுகள் எல்லாம் 
உடைந்ததில் 

கூர் வாள் கொண்டு
கிழித்த குடமாய் 
ஏக்கங்கள் ஏந்தி
துளிர்த்தன நீர்ப்பூக்கள்....

உன் மணநாளை நீ அறிவித்த
அந்நாளே
உயிர் உரிந்த பிணமாய்

இதழோடு இறுகி வர மறுத்த
புன்னகையை
வலுக்கட்டாயமாய் இழுத்து வந்து
"வருகிறேன்" என்று வாக்களித்தேன்....

நீ இன்று வரை அறிந்திடாத
என் காதலுக்கு முடிவுரை எழுதி

உனக்காக எழுதப் போகிறேன்
வாழ்த்துரை....




1 comment:

  1. நீ இன்று வரை அறிந்திடாத
    என் காதலுக்கு முடிவுரை எழுதி
    உனக்காக எழுதப் போகிறேன்
    வாழ்த்துரை....
    Nice :)

    ReplyDelete