Sep 17, 2011

கால ஓட்டத்தில் கவியானேன்

இதயத்தில் வியாபித்து 
உதிரத்தில் ஒட்டிவிட்ட
ஓரிரண்டு முத்தங்களும் 

அநியாயமாய் வெட்கப்பட்டு 
அதற்குப்பின் நீ உதிர்த்த 
வாக்கியங்களும் 

போதும் போதும் 
என்ற போதும் 
"இன்னும் இன்னும்" என்று நீ ஊட்டிய
உன் பாசமும் 

உயிர் கொடுத்து உயிர் வாங்கிய 
தொடுதலும் 
தொடுதலை மீற முயற்சித்து 
தோற்ற நம் ஆர்வமும்....

களைப்பறியாது நடந்த சாலைகளும் 
சாலையோரம் நின்று நம்மை
வெறித்து பார்த்த 
பார்த்தீனியச் செடிகளும் 

மிட்டாய் தின்கிற சாக்கில் 
சப்புக் கொட்டி 

நீ என் பஞ்சு மிட்டாய் 
என்று ஒழுகிய காலங்களும் 

தேர் வீதியில் சந்திப்பதாய் சொல்லி 
வராமலே ஏமாற்றிய குறும்புகளும் 
அதில் மிச்சமான அழுகைகளும் 

கவிதை ஒன்று கிறுக்கி விட்டு 
அதை சொல்லும் போது  
உன் கை வளையல்களில் 
நான் வளைந்த மாலைகளும் 

மடிந்தாலும் மறக்காத 
ஞாபகத் தீர்த்தங்கள்... 

என் நடமாடும் கவிதையே 

உன்னால் அடைந்ததும் 
தொலைத்ததும் ஞாபகத்தில் இல்லை 

ஒன்று மட்டும் உண்டு 

நீ வந்து போனதில்  
காதல் கொண்டு பித்தனாகி

உன் கன்னக் குழியோரம் 
ஒரு துளி வியர்வையாக ஆசைப்பட்டு.... 

பின்

கால ஓட்டத்தில் 
கவியானேன்.....

2 comments:

  1. உன் கன்னக் குழியோரம்
    ஒரு துளி வியர்வையாக ஆசைப்பட்டு....

    பின்

    கால ஓட்டத்தில்
    கவியானேன்..... super poem..............

    ReplyDelete
  2. Arumaiyaana Kavithai :)

    ReplyDelete