Apr 19, 2015

அன்பே நீ என் வரமா...?

காற்று வீசும் பாதை பார்த்து
காத்து கிடக்கும் நான் ஒரு மரமா
இதயம் முழுதும் காதல் தந்தாய்
அன்பே நீ என் வரமா.... ?

தூக்கம் தொலைத்த ஒற்றை பறவை
நான் ஆகிறேன் -
உன் தோளில் சாயும் ஒரு நிமிடம் வேண்டும்
என்று ஏங்கினேன்...

காத்திருக்கும் காலம் யாவும்
கனவுகளில் போகும் போகும்
சேர்த்துவைத்த ஆசை சொல்ல
வழி ஒன்று வேண்டும் வேண்டும்

உனதெனது ஏதுமில்ல
உண்மை அதுதான்
உந்தன் பார்வை படாத போது
நானும் ஊமை தான்...

இடம் பொருள் ஏவல்
உன் காதலுக்கில்லை
உயிருக்குள் ஊடேறி
இம்சிக்கிறாய்...

தடம் அறியா மழலை
நான் ஆகிறேன்
கடலுக்குள் சிக்கிய
மழையாகிறேன்.....

எண்ணங்கள் யாவிலும்
உன் வண்ணமே
வழி துணை எனவே
நீ வேண்டுமே...

உருகும் பனியென என் மனம் உருக
உன்னை தேடி நான் தேய்கிறேன்
விழுகும் மலர் சருகுகள் யாவிலும்
உந்தன் பெயரே நான் காண்கிறேன்....

காற்று வீசும் பாதை பார்த்து
காத்து கிடக்கும் நான் ஒரு மரமா
இதயம் முழுதும் காதல் தந்தாய்
அன்பே நீ என்  வரமா.... ?

1 comment:

  1. Very great post. I simply stumbled upon your blog and wanted to say that I have really enjoyed browsing your weblog posts. After all I’ll be subscribing on your feed and I am hoping you write again very soon! Thank you so much for sharing this wonderful post with us. I would love to hear more from you, keep posting.
    Best regards
    tree removal erie pa

    ReplyDelete