Nov 3, 2010

களைந்த கனவு

பாதி தூக்கத்தில்
எழுந்ததில்லை
அன்று மட்டும்

எனக்கே தெரியவில்லை...
என்ன ஆனது...
சொல்லவும் யாருமில்லை....

வந்தாய்
நின்றாய்...
ஏதேதோ சொன்னாய்...

என் கனவு புலத்தில்
சின்னதாய் ஒரு அதிர்வு...

எழுந்த போது
எல்லாம் இருளாய்...

இரவின் அழகையே கெடுப்பது போல்...
இடையில் நான் மட்டும்
விழித்தேன்...

நீ வந்தாயே...
நின்றாயே...
எங்கே போனாய்...

என் கண்களில் கனவு ஊர்வலம்
நடத்திவிட்டு
காணாமல் போனாய்...

சுகமாய் தான் இருந்தது
உன்னால் தூக்கம் களைந்தது....

நேரில் இருந்தால்
உன் நிழலை கூட
தொடமுடியாது துடிப்பேன்

கனவில்...
உன் கை தொட்டு...
கன்னம் நனைத்தேன்...

அது சரி...

விடியும் வரை..
உன்னை எண்ணி
உறங்காது கிடந்தேன்...

சில துளிகள் கண்ணீரோடும்...
பல துளிகள் தண்ணீரோடும்....

முடிந்தது
என் அந்நாள் இரவு....

No comments:

Post a Comment