Nov 2, 2010

தொல்லை

நீ பேசாது போனால்
ஒரு விதமாய் வலிக்கும்...

பேசிவிட்டு பிரிந்தால்
ஒரு விதமாய் வலிக்கும்...

பார்க்காமல் போனால்
உயிர் மரிக்கும்

பார்த்துவிட்டால்
என் இளமையின் எல்லைக்குள்
எரிமலை தகிக்கும்..

தள்ளியே நின்றால்..
ரத்தத்தில் பசிக்கும்...

நீ அருகில் வந்தால்
என் நாடியும் துடிக்க மறக்கும்...

சிரிக்காது போனால்...
என் செல்லெல்லாம்
சிதறும்...

சிரித்துவிட்டால்
கண்களுக்குள் பூக்கள் பூக்கும்...

தொடாது போனால்...
என் உடலே சிறையாகி
என்னை தண்டிக்கும்...

தொட்டுவிட்டால்...
வானமே என் வீடாகும்...

மொத்தத்தில்...
நீ இருந்தாலும் தொல்லை...
இல்லாவிட்டாலும் தொல்லை....

No comments:

Post a Comment