Nov 3, 2010

என்ன செய்யும் அந்த மரணம்???

அன்னமே
ஆயுள் ரேகையே...
என் ஆவி குடித்த ஓருயிரே...

நாளும் நெஞ்சில்
நயமாய் கிடந்து
உயிர் வளர்த்த ஓவியக்காதல்...
உள்ளத்தை உடைக்க...

இப்போது வரைந்து முடிக்கிறேன்
ஒரு ஆறுதல் கவிதை....

வானத்தோடு முழுநிலா ஒன்று
வந்த தடமின்றி
அவசரமாய் கலந்தது போல்
ஆனதே நம் காதல்....

பல முறை பார்த்ததும்
பவுர்ணமியாய் வியர்த்ததும்

கண் மூடி கண்ட
கனவாய்..
களைந்தே தான் போக....

என் நெஞ்சின் வேராய்
இருந்தவளே
எங்கே தான் போனாயோ....

உன் சின்ன இதழ் முழுதும்
சித்திரம் தான் வரைந்து
விழியோரம் தேடல் பல செய்து

மோகத்தின் மேடுபள்ளம்
முற்றிலும் கண்டது
ஒரு காலம்....

உன்னை
சிறுவிரலால் தொட்டு
முகம் முழுதும்
எழுதுவேன் ஒரு காவியம்...

நான் இன்று தொடங்கி வைத்த
நம் காதல் கதையோடு
தேனே விழுந்ததடி

பிரிவுத் தீ!!!

தாகத்தில் தகிக்கும் போது
என் மோகனமே
உன் தேசமெங்கும் இருக்கும்
என் ஆளுமை...

உன் அகம் அறிந்து
முகம் பார்த்த நான்

இப்போது
என் நகக்கண்ணில் வலிக்கொண்டு
தனித்திருக்க...

எந்த தீவில் உன்னை அடைத்தது
இந்த உலகம்????

பனிப்பூ உன்னை பார்த்து
பகல் முழுதும்
பேசுவேன்
கவிதை

உன்னை பிரிந்து இப்போது
நினைவிழந்து போனது நெஞ்சு!

காற்றாகி காதல் சொன்ன நித்திலமே....
என் இதயத்தை சுமந்து கொண்டு
நீ எந்த தேசம் சென்றுவிட்டாய்....

மறைப்பதாலா மறைந்துவிடும்
மல்லிகையின் மனம்....

கொஞ்சம் சிதறுவதாலா வற்றிப்போகும்
ஆழ்கடல் ஆழம்...

இல்லை...

காதல் சுமைகள்
நெஞ்சுக்குள் சுகம்!

தூக்கம் தழுவ மறுக்கின்ற
கண்ணிமையும்...
பேச மறுத்து
வார்த்தை தின்னும்
இதழும்...

மௌனமாய் உன்னை
நினைத்து நினைத்து
நிம்மதி கொள்ளும்....

நானாக இப்போது
நானில்லை கண்ணே

தேனாக பொழிந்திட நீயுமில்லை....

தானாக வருகிற விழிநீரை துடைக்க
யாருமில்லை...

உன்னை கனவிலேனும்
உச்சி முகர்ந்து
சிலிர்க்கிற
என் காதல் மட்டும் போதும்...

ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருப்பேன்....

என்னை..
என்ன செய்யும் அந்த மரணம்??

1 comment:

  1. மறைப்பதாலா மறைந்துவிடும்
    மல்லிகையின் மனம்....

    கொஞ்சம் சிதறுவதாலா வற்றிப்போகும்
    ஆழ்கடல் ஆழம்.....

    Arputhamaana varigal... (Sri)

    ReplyDelete