Nov 26, 2010

தொல்லை செய்...

 தயவு செய்து
என்னை தொல்லை செய்...

காதலித்து கொள்ளை செய்..

கழுத்தோடு விரலிடு
நான் கோபம் கொண்டால்
உன் மார்போடு சிறையிடு....

மௌனம் கொல்கிறதா
மூச்சு நிற்கும் வரை முத்தமிடு...

காதல் சொல்லியே
தூக்கிலிடு...

உன் கூந்தல் உதிர்வுகளும்
என் இதயத்திற்கு அன்பளிப்பு...

ஓடிப்பிடித்து என்னை சேரு...

குளித்துவரும் என்னை
மீண்டும் அழுக்காக்கு...

எதிர்பாராத போது
என்னை பார்வையால் வெட்டு..

எவ்வளவு முடியுமோ
அவ்வளவு திட்டு...

என்னை கேட்காமல்
சிலமுறை தழுவு..

தாகமென்றால்
என்னையே
தண்ணீராய் பருகு...

என் உயிர்ப்பூவை
கண்டுபிடித்து கைது செய்..

எலும்புகளின் விளிம்புகள் தோறும்
உன்னை புகுத்து..

உனக்கான எல்லாமாய்
நான் இருப்பேன்...
இருக்க வேண்டும் நீயும் தான்...

உனது கனவுகளில் வந்து
கண் திறப்பேன்...

கண்ணாடி முன் நீ நின்றால்..
உன் கை பிடித்து இழுப்பேன்...

திணறடித்து சாகடிப்பேன்...
முத்தங்கள் கேட்டு அழ வைப்பேன்...
தீண்டிவிட்டு ஒளிந்து கொள்வேன்..

என் இளமைக்குள் வழிந்தொழியும் பெண்மையே
உன் மென்மைக்குப்  பணிவேன்...

கண் தூக்கம் கெடுத்து ஒலி செய்வேன்..
கால் கொலுசின் பரல் திருடி புன்னகைப்பேன்...
உன் கண்ணியம் மறக்கடிதுப் பறந்துபோவேன்...

நான் தருகிற தீண்டல்களில்
உன்னுயிர் பயிராகும்...

நாணம் தடுப்பின் அது உன்பாடு...!
நகர்ந்து போகல் ஆகாது!

பத்திரமாய் நீ பார்த்திருந்த
உன் அழகு...
என் நிழல் பட்டு இன்னும் அழகாகும்..

பிடித்திருந்தால்
காதல் சன்மானம் வழங்கு...

காலத்திற்கும்
கலந்திருப்பேன்..

உன்னோடு...

நீங்கினால் உயிர்கொள்ளாது என் உலகு!

4 comments:

  1. Thollai sei...
    Very nice...
    who disturbed u?

    ReplyDelete
  2. நீங்க கோயம்புத்தூர்ரா? நானும் தான்... நல்லா பீல் பண்றீங்க..

    ReplyDelete
  3. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_09.html
    நன்றி!

    ReplyDelete