Mar 16, 2011

இதை படித்துவிடு ஒருமுறை

புரிகிறதோ இல்லையோ...
இதை படித்துவிடு ஒருமுறை....

உன்னை எண்ணி விம்மிக் கொண்டிருக்கும்
என் வெள்ளைத் தாள்களில்

கருப்பு நிற உதிரத்துளிகள்..

ஒவ்வொன்றும் என் நரம்பினை கிழித்து வந்த
காதல் மொழிகள்...

சலனமே இல்லாத உன் முகம்
தொட்டதும் என் விரலோடு ஓட்டுகிற சிவப்பு தேகம்...
என் உயிரையே இரண்டாய் பிளக்கும்
உன் உச்சந்தலை வகுடு...
தொலைந்து போகச்சொல்லி என்னை தொல்லை செய்த கண்கள்...
கட்சிதமாய் என்னை களவு செய்த மூக்கு...
எந்த கவிதையாலும் வர்ணித்துவிட முடியாத இதழ்கள்..


இப்படி நான் என் சுயம் இழந்து
சொல்லுகிற பொழுதில்
பொய்க்கவி என்று நீ அழைப்பாய்...
உன் மெய்ச்சிரிப்பில்
சலவை செய்யப்பட்ட என் கவிதைகள் எல்லாம்
உலகத்தின் தூய்மையான உண்மைகளாய்
உருவேடுத்தனவே....

அதுவெல்லாம்
என் மரணப்படுக்கையில் கூட
மறக்காதிருக்கும்..

உன் கண்ணசைவெல்லாம்
கவிதையென்று விழுந்த
காதல் பொழுதுகளை
மறக்கச்சொல்லி கட்டளையிட்டாய்

எனதாகி இருந்த எல்லாவற்றிலும்
உன் பெயர் எழுதிய பின்
உன்னை விடுத்த வாழ்க்கை
எப்படி சாத்தியமாகும்?

புரிகிறதோ இல்லையோ...
இதை படித்துவிடு ஒருமுறை....

உயிரை காகிதமாக்கி
உன்னை தூரிகையாக்கி
என் இதயத்தை நிரப்பிய
உதிரத்தை எல்லாம் வண்ணமாக்கி
வரைந்த ஒரு காதலோவியம்

முழுதாய் வரையப்படும் முன்
கலையப் பட்டதில்....

உன்னை எண்ணி விம்மிக் கொண்டிருக்கும்
என் வெள்ளைத் தாள்களில்

கருப்பு நிற உதிரத்துளிகள்..

ஒவ்வொன்றும் என் நரம்பினை கிழித்து வந்த
காதல் மொழிகள்...






4 comments:

  1. எனதாகி இருந்த எல்லாவற்றிலும்
    உன் பெயர் எழுதிய பின்
    உன்னை விடுத்த வாழ்க்கை
    எப்படி சாத்தியமாகும்?


    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. very nice dear....

    ReplyDelete
  3. உன் கண்ணசைவெல்லாம்
    கவிதையென்று விழுந்த
    காதல் பொழுதுகளை
    மறக்கச்சொல்லி கட்டளையிட்டாய்

    எனதாகி இருந்த எல்லாவற்றிலும்
    உன் பெயர் எழுதிய பின்
    உன்னை விடுத்த வாழ்க்கை
    எப்படி சாத்தியமாகும்?

    அருமையன வரிகள்...நன்றாக எழுதுகிறீர்கள்....வளர வாழ்ததுக்கள்....

    ReplyDelete