Sep 10, 2011

இம்சை

உன் நிழல் படக் 
காத்திருந்து 
கவிதை செய்வதும் 

நீ சிரிக்கும் போது
உன் இதழ்களை பாராட்டி 
முத்தமிடுவதும் 

தூக்கம் தொலைத்து 
எழுகையில் 
உன் மூச்சுக்  காற்றில் 
நனைவதும் 

மனசெல்லாம் நீயிருக்க 
மழை காற்றில் சிக்கிய பட்டமாய் 
பறப்பதுவும்

ஊடல் கொள்கிற பொழுதில்
தோளில் சாய்ந்து அழுவாய் 
அதில் கரைந்து சர்க்கரையாவதும் 

நீ இம்சை என்று தெரிந்தும் 
இன்னும் இன்னும்
ஏக்கம் கொள்வதும்

பிடிக்கிறது... 

எனது நேற்றையும் இன்றையும்
நிரப்பிய தேவதையே....

உன் கை பிடித்து போனால்
தூரமெல்லாம் பக்கமாகும்...

என் இதயத்தில் ஒட்டிக் கொண்ட  
உன் நகப்பூச்சின் வண்ணமெல்லாம்
காயவும் மறுக்கிறது....
அழியவும் மறுக்கிறது

போதும் போதும்
என்றாலும்

பொழிந்து கொட்டும் காதலே

உன்னால் உனக்காக
உயிர் கொள்கிறேன்...

உன் மௌனங்கள் முடிகிற
நொடிகளுக்காக காத்திருப்பேன்
சந்தோஷமாய்...

அந்த மௌனங்களின் முடிவில்
எனக்காக சில வார்த்தைகள்
பிறப்பெடுக்குமே
அதற்காக.... 

3 comments:

  1. //உன் மௌனங்கள் முடிகிற
    நொடிகளுக்காக காத்திருப்பேன்
    சந்தோஷமாய்...

    அந்த மௌனங்களின் முடிவில்
    எனக்காக சில வார்த்தைகள்
    பிறப்பெடுக்குமே
    அதற்காக....
    Nice dear :)

    ReplyDelete
  2. கவிதை எழுத தூண்டும் வரிகள்; நித்திரையிலும் நினைவூட்டும் கவித்துவங்கள்.. அருமை என் தோழியே ..

    ReplyDelete