Sep 10, 2011

மழையை போல மனசு உனக்கு

மழையை போல மனசு உனக்கு
உலகம் சொக்கும் அழகிருக்கு 
தேனப் போல குரலிருக்கு 
நிலவு போல நிறமிருக்கு.... 

இறுகிப் போன என் மனச 
இளகிப் போக வச்சவளே
எந்த தேசம் கடந்து வந்த 
இந்த மனச ஜெய்க்க வந்த... 

நீ முத்துமுத்த பேச
மொத்தமும் மறந்து போகாதோ 
உன் முகம் பார்த்த கணமே.. 
மரண வலியும் பறந்து போகாதோ... 

வானத்தில் ஜன்னல் வச்சு 
வட்ட நிலா உன்ன பாக்குதடி 
உன் கண்ணுக்குள்ள என்ன  சோகம் 
எட்டி எட்டி பாக்குதடி... 

யாரு மீது கோபமடி..
யாருக்காக மௌனமடி 
யார் பேச்சு காயோ நீ... 
சொல்லு சொல்லு கண்மணி... 

தென்றலடிச்சா சிரிக்கும் 
புயலடிச்ச இறக்கும் 
பூப்போல இருக்காதே... 
பூமி மீது எப்போதும் 
தென்றல் மட்டும் அடிக்காதே..... 

சுவற்றில் ஏறி 
வலை பின்னும் சிலந்தி எப்போதும் 
சுவற்றுக்கு பாரமில்லை.... 
சொல்லவா உண்மை கண்ணே 
நீ எனக்கு யாரோ இல்லை... 

விழியோடு சோகம் கொண்டால் 
வழியோடு வலிகள் சேரும்... 
உள்ளத்தை உடைக்கும் ஏக்கம் 
எல்லாமே சீக்கிரம் போகும்....  


வாழ்ந்திட சொல்லி வாழ்க்கை அழைக்கிது
ஆயுளை நீட்டும் அதிசயம் அதுவோ 
சிரிப்புக்குள் இருக்குது 
சிரித்திடு சிரித்திடு..... 

மழையை போல மனசு உனக்கு
உலகம் சொக்கும் அழகிருக்கு 
தேனப் போல குரலிருக்கு 
நிலவு போல நிறமிருக்கு.... 

இறுகிப் போன என் மனச 
இளகிப் போக வச்சவளே
எந்த தேசம் கடந்து வந்த 
இந்த மனச ஜெய்க்க வந்த... 


3 comments:

  1. தென்றலடிச்சா சிரிக்கும்
    புயலடிச்ச இறக்கும்
    பூப்போல இருக்காதே...
    பூமி மீது எப்போதும்
    தென்றல் மட்டும் அடிக்காதே.....
    waw azhagaana varigal :)

    மழையை போல மனசு உனக்கு :)

    ReplyDelete
  2. migavum pidithirukiradhu :) :) romba naal kalichu unnoda updates dear :) :)

    ReplyDelete
  3. மழையை போல மனசு உனக்கு
    உலகம் சொக்கும் அழகிருக்கு
    தேனப் போல குரலிருக்கு
    நிலவு போல நிறமிருக்கு....

    - Really nalla iruuku!!!!!!!! Best wishes

    ReplyDelete