Nov 27, 2010

சுமை

மனசுக்குள் ஆசைகளுண்டு...

கண்ணுக்கழகாய் புடவையுடுத்த..
கைவிரல் நகம் தொட்டு சாயம் பூச...
அவ்வப்போது மருதாணி வாசம்
உள்ளங்கை கொள்ள...

கண்ணாடி வளையல் நிறைய போட்டு
எல்லோர் முன்னும் நடை பழக...
லாக்மியின் உதட்டுச்சாயத்தை ஒருமுறை
இதழெல்லாம் படர்த்த...

நிலவொளியில் காதலனுடன்
இரவு ரசிக்க...
புதிதாய் வருகிற படம் பார்த்து
தோழிகளோடு சிரித்துப் பேச...

அந்த சின்னப் பெண்
சாலையோரத்தில் நின்று கனவு காண்கிறாள்...
கையில் விழுகிற சில்லறையை பொறுக்கிக் கொண்டு...

இவளுக்கு...
தங்கம் விற்கிற விலை தெரியாது...
தகிக்கும் போது
தண்ணீர் கூட கையில் கிடையாது...

என்ன இவள் வாழ்க்கை என்று
எண்ணிக்கொண்டிருக்கையில்...

கண்கள் நிறைய கனவுகள் கொண்டு

சாலையைக் கடந்து

சுமந்து போகிறாள் அவள்...
குப்பைகளோடு
ஆசைகளையும்!!!

No comments:

Post a Comment