Dec 22, 2010

மடியோடு மட்டும்

கருவோடு நீ தரித்த
அந்த கணமே
நீ அவளுக்கு அகிலமானாய்....

அம்மா என்று நீ
அவளை அழைக்கப் பிறந்தாய்

நீ அழைத்து முடிக்கும் முன்
உன்னை அள்ளி எடுக்க அவள்
துடித்துக் கிடந்தாள்....

அவளே
அத்தனைக்கும் முதல் எழுத்து...

இந்த அகிலம் வளர
தலையெழுத்து!!!

நிலா சோறு நீ தின்ன
நட்சத்திரம் பறித்திடுவாள்...

நாற்காலியை பிடித்து
நயமாய் நீ நடக்கும் போது
அவள் கூட உன் நடையை
தன்னையறியாமல் பழகிடுவாள்...

நீ தரும் முத்தம்
சுகமாய் போனாலும்
நீ விட்டுவைக்கும் எச்சில் தான்
அவள் அறிந்திருந்த அமுதம்!

நீ பசி தாங்க மாட்டாய....
அதை அறிந்தவள்
உன் பசி ஆற்ற உதிரம் தந்தாள்..

நீ எழுதிடும் அகரங்கள்
தவறே ஆனாலும்
ரசித்திடும் முதல் ஆசிரியை...

நகம் வெட்ட
உன் விரலை பிடித்தாலும்
உனக்கு வலிக்காது வெட்ட
அவள் படும் பாடு...

நீ அறிந்திருக்க மாட்டாய்...

உலகத்தை ஆளுகிற பொய்களுக்கிடையில்
ஒரு உண்மை இருக்குமானால்...

அது தான் அம்மா..

நீ அழுதிடும் போது
உன் கண்ணீரை ஆற்ற
அவள் விரலோடு இதயமும் நீளும்...

மருந்தே இல்லாத
நோய் 
அது கூட அன்னை
மடியோடு மட்டும் ஆறும்!

அதில் காதலும் அடங்கும்!

எத்தனை தான்
சண்டையிட்டாலும்
சுவாசத்தை அடுத்து
உன் நெஞ்சுக்குள் நிரம்பி கிடக்கும்
அம்மாவின் ஞாபகம்..

உன்னையே கொஞ்சிக் கிடப்பாள்
நீ கொஞ்சினால் மிஞ்சி நடப்பாள்

கோபப்பட்டால்
கெஞ்சி கிடப்பாள்...

அவள் மட்டும் தானே 
நீ எப்படி இருந்தாலும்
அன்பு செய்பவள்...

நீ வளர
அவள் தேய்ந்து போவாள்...

அவளறிந்த மொழிகளில்
அன்பு தான்
தலை மொழி..

உன்னை கையில் ஏந்தி
தாலாட்டினாள்

அவள் முந்தானை பிடித்து
நீ உலகை வளம் வர...
ஓராயிரம் யானை பலம் உன் தோளோடு பிறந்த காலத்தை
மறவாது

அவள்
முதிரும் போது
சீராட்டு...

அதுவே..
அவள் உனக்கு உயிர் தந்ததற்கு
நீ செய்யும் பாராட்டு...





7 comments:

  1. Un kavithaiai varnikka varthaigalai illai. Superb one..

    ReplyDelete
  2. unarvugalukku uyir thanthai pennae!!!

    ReplyDelete
  3. அவள் முந்தானை பிடித்து
    நீ உலகை வளம் வர...
    ஓராயிரம் யானை பலம் உன் தோளோடு பிறந்த காலத்தை
    மறவாது

    அவள்
    முதிரும் போது
    சீராட்டு...

    அதுவே..

    அவள் உனக்கு உயிர் தந்ததற்கு
    நீ செய்யும் பாராட்டு....


    Good. Keep penning!!

    ReplyDelete
  4. very good please keep it up..(praveena)

    ReplyDelete
  5. sema!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  6. no words to compliment akka....lovely.......so so good..athithya.

    ReplyDelete