Nov 8, 2010

ரயில் பயணம்

நினைவுப்படுத்திப் பார்க்கிறேன்
நெடும் பயணம் ஒன்று
நொடிகளில் கடந்ததை...

எதிர் இருக்கையில் அமர்ந்த போதும்
என் மனதின் ஓரமாய்
அரியணை இட்ட உன்னை
நினைதுப்பார்தாலே
பரவசம்...

யார் நீ
உன்னால்
என் இதயத்தில் சலனம்...
சின்னதாய் ஒரு பூகம்பம்!

உன்னை அந்த நொடியே
தின்று விடுவது போல் பார்த்த
என் கண்களை நான்
திட்டிக்கொண்டிருந்த போது...

"போதும் திரும்பு" என்பது போல்
ஒருவர் என்னை முறைக்க...

திரும்பிக்கொண்டேன் ஜன்னல் பக்கம்...

கண்களில் ஒட்டிவிட்ட உன்னை
உதறவும் முடியாமல்
சிதறிப்போனேன்...

ஏதாவது பேசு என்று
என்னை உந்திக்கொண்டிருந்த மனசாட்சியோடு
சண்டைப்போட்டுக் கொண்டிருந்தேன்...

மறுகணம்..
நீயே பேசினாய்...

அன்று வந்த மழைக்கும்
இறுகிப்போயிருந்த ஜன்னல் கதவுக்கும் நன்றி!

உன் மீது சாரலாய்ப் பட்டு
தீர்தமாயின மழைக்கரங்கள்!

நான் பார்க்காத போது
உற்றுப்பார்தாய்...

நான் பார்த்ததும்
நெற்றி முடி விளக்கி
உனக்குள் சிரித்தாய்..

அதுவரை பயணத்தையே வெறுத்த நான்
முதன்முறையாய் ரசித்தேன்...
இன்னும் நீளக்கூடாதா என துடித்தேன்..

நீ படுத்துறங்கிய போது
போர்வைக்கிடையே நிலவரும்பாய்  தெரிந்த
உன் முகத்தைப் பார்த்துக்கொண்டே...
தூங்கிப் போனேன்....

நான் விழித்த போது...
நீ இருந்த இருக்கை
என் முகத்தில் வெறுமையை
அறைந்தது!!!

குறுக்கும் நெடுக்கும் கடக்கிற
பயணிகளின் நடுவே
உன்னை தேடிக் கலைத்தேன்...

நான்கு வருடங்கள் கடந்த பின்னும்
எனக்குள் வேரூன்றிவிட்ட உன்னை
கலைக்கப் பார்த்து
களைந்து போகிறேன்!!!

அடுத்த முறை சந்தித்தால்..
எதிரெதிர் இருக்கையில் வேண்டாம்....

அருகருகே அமர்ந்து பகிர்ந்து கொள்ளலாம்....

மனம் கொண்ட அவஸ்தைகளை!!!

1 comment:

  1. Andha Rayil payanam ungalukku vaaikka vaalthukkal

    ReplyDelete