Dec 9, 2010

கருவில் அழிந்த கவிதைகளுக்கு...

கருவில் அழிந்த சில
கவிதைகளுக்காக...

இதோ அழுகிறது
இன்னுமொரு கவிதை...!

கையில்
பேனாவும் காகிதமும்
இல்லாத நேரம்..

என் மனதுக்குள் தளும்பி இறந்த
அந்த கவிதைகள் யாவும்
மீண்டும் வர சாத்தியமா...
முயன்று தோற்கிறது
என் கற்பனைக்கருவரை!

தூக்கம் தவிர்த்து
ஏதேனும் எழுதப் பார்த்தால்
எதுவுமே தோன்றாது பல நேரம்...

கண் மூடி படுக்கையில்...
பல நாளாய் காணாது வந்த காதலி போல்
தொல்லை செய்யும்...
அந்த முரட்டுக் கவிதைகள்...

காலையில் எழுதித் தொலைக்கலாம் என..
காகிதம் எடுத்தால்...
வரமாட்டேன் என்று அடம் பிடித்து
செத்துப் போன

அந்த
நல்ல கவிதைகளை....
எப்படி மீட்பது..?

சாலையில் நடக்கும் போது
பட்டென்று பிறக்கும்
கவிதைகளை
கையில் அள்ள நினைக்கும் போது

பட்டுப் பூச்சியாய்..
பறந்தொழிந்த போன
கவிதைகளை எப்படி மறப்பது??


இன்னும்
பலவாறாய்...

நான் பறிகொடுத்த
கவிதைகளுக்காய்...

இதோ கண்ணீர் வடிக்கிறது
இந்த கவிதை!!!!

4 comments:

  1. Migavum azhagaana kavidhai... ezhuthaamal vitta kavidhaigalai enni kooda innumoru kavidhai ezhutha mudiyumaaa? abaaramaana karpanai...

    ReplyDelete
  2. நல்ல கற்பனை நண்பா

    ReplyDelete