Dec 15, 2010

போன தொலைவு நினைவில் இல்லை

சுட்டெரிக்கும்  வெயில்
நிலா வெளிச்சமாக....

வெட்டவெளி பாதை
ஒன்று மலர்க்காடாய் போக...

உன்னை உயிருக்குள் பூசி
நடந்தேன்....

போன தொலைவு நினைவில் இல்லை....

உன நிழல் விழுந்த மண்ணைத்
தொட்டுப்பார்த்து
அது கனவில்லை என உறுதி கொண்டேன்.. 

உனக்கும் எனக்கும்
இருந்த இடைவெளியை
குறைக்கப் பார்த்து
நான் அருகில் வரும் போதெல்லாம்..

தள்ளி நடந்தாய்..

தளிரே...
உன் சுவாசமேனும் படுகிற
தூரத்தில்
நான் இருக்கக் கூடாதா
இதயம் யாசித்தது...

நீ விரித்திருந்த மௌனப் போர்வையை
விலக்கத் துடித்து
இறந்து போன
என் வார்த்தைகளை

அள்ள முயற்சித்து
தோற்றுப்போன என்னை
காற்று கூட திட்டியது

அறிவாயா?

உனக்காக தூக்கம் தொலைததுவும்...
உருகிக்கிடப்பதுவும்

சொல்லத் துடித்தே
சில தூரம் நடந்துவிட்டேன்...

கவிதை வார்த்துக் கிடப்பதுவும்
காதல் என்னை தின்பதுவும்

எப்படிச் சொல்ல
தயங்கியே அமைதி கொண்டேன்....

இத்தனை காலமும்
என் தோட்டம் முழுதும்
நீயே பூத்துக்குளுங்கினாய்...

உனக்கு எப்படி நன்றி சொல்ல...
யோசித்து யோசித்து

என் கால்களுக்கடியில்
வியர்வைக்கடல்...

உன்னை இதயத்தின் மையக்கூட்டில் உட்காரவைத்த
நாளிலிருந்து
நீ ஆளுகிற இந்த உடலையும் உயிரையும்

உன் உள்ளங்கையில் திணித்துவிட
ஆசைப்பட்டு நடந்தேன்...

ஒரு மணி நேரம் கடந்திருந்தது!

உன்னோடு இருக்கும் போதெல்லாம்
காலம் கால்களில் சர்க்கரம் கட்டிக்கொண்டு ஓடுகிறதே

என்ன செய்வேன்?

நீ வரமாய் வரப்போவதாய்
நம்பிக்கை கொண்டிருக்கும்
என் வீட்டு செடிகளிடம்

இன்று நிச்சயம் காதலை சொல்லுவதாய்
சத்தியம் செய்து வந்தேன்...

அதற்காகவாது....

நமக்குள் மூண்டு கிடந்த
மௌனத்தை
நிறுத்தியாக வேண்டுமென்று
லட்சியம் கொண்டேன்...

நான் வெல்ல துடித்த மௌனம்
என்னை கொன்று குவித்த நேரம்..

நீ புன்னகையால்
புதிர் தடவினாய்...

நீ போகும் வரை
என்னை பேச விடாத
எதோ ஒன்று
நீ போன பின்
சத்தமாய் உன்னை கூப்பிட சொல்லியது!

மழை
வந்த தடமின்றி
நின்றுவிட்டாலும்
அது விட்டுச்சென்ற ஈரம்
வேர்களில் தங்கியது போல்
உன் வாசம் மட்டும் என் சட்டை நுனியோடு
மிச்சமிருந்தது!

சொல்லவந்த எதுவுமே...
சொல்லப்படாமல் முடிந்து போன

இது போன்ற சந்திப்புகளில்

போகிற தொலைவு நினைவில் நிற்ப்பதில்லை....

5 comments:

  1. நல்லா தான் உருகறீங்க

    ReplyDelete
  2. hi dis z satya congrats nd all d best

    ReplyDelete
  3. அழகான கவிதை...



    "மழை
    வந்த தடமின்றி
    நின்றுவிட்டாலும்
    அது விட்டுச்சென்ற ஈரம்
    வேர்களில் தங்கியது போல்
    உன் வாசம் மட்டும் என் சட்டை நுனியோடு
    மிச்சமிருந்தது!"



    நன்றாக இருக்கிறது..



    வாழ்த்துக்கள்,



    ராம்

    ReplyDelete
  4. Hey.. Migavum arumayaaga yosithirukireergal...

    ReplyDelete