Jan 6, 2011

ஏழாம் அறிவு

இந்த நொடி கடந்து போகும்
எதுவும் நிலையில்லா வாழ்க்கை இது..

பூமிக்கு வரும் முன்னமே...
களவு கற்றோம்..
அன்னையின் உயிர் உறுஞ்சி வாழக் கற்றோம்...
அவளை அப்போதே உதைக்கக் கற்றோம்...
ஒட்டு கேட்கவும் கற்றோம்...
பிறந்த போதே அழவும் கற்றோம்
அழுகை மறைத்து சிரிக்கவும் கற்றோம்...
அன்பில் உருக அழகாய் கற்றோம்..
படைப்புகள் அத்தனைக்குள்ளும் நாம மட்டும் சிரிக்க கற்றோம்...
சிரித்தே சில நேரம் சிதைக்கக் கற்றோம்...
சிந்திக்க ஏனோ மறக்கக் கற்றோம்..
ஜாதி மதத்தில் பிழைக்கக் கற்றோம்..
பணத்திற்கு மட்டும் இறக்கக் கற்றோம்
பாசத்திற்கு துடிக்கக் கற்றோம்
பழி வாங்க பலவகைகள் கற்றோம்
சந்தேகம் அதை முழுதாய் கற்றோம்
சமரசம் அதை மிதிக்கக் கற்றோம்...
தர்மங்கள் செய்ய அரிதாய் கற்றோம்..
சுயநலம் அதை சுயமாய் கற்றோம்
சோகங்கள் வரின் மட்டும் வணங்க கற்றோம்
மூச்சுள்ள வரைக்கும் குறை சொல்ல கற்றோம்
முகத்தில் ஒன்றும் மனதில் ஒன்றும்
பூசி நடிக்க புன்னகை கற்றோம்...
பேசி முடியும் செயலை எல்லாம்
மிரட்டி முடிக்க மிடுக்காய் கற்றோம்..
மீசை முளைக்க தொடங்கும் முன்னமே
ஆசை வளர்த்து அலைய கற்றோம்...
மோகம் கற்றோம்..
விவேகமற்ற வேகம் கற்றோம்....
நாணம் கற்றோம்
நயவஞ்சகம் கற்றோம்...
கொலை செய்ய கற்றோம்..
கோபத்தால் ஏதொன்றும் அழித்திடக் கற்றோம்...
ஆற்றா துயர் வரின் குடிக்கக் கற்றோம்
பெண்ணொன்று பிறந்தால் புதைக்கக் கற்றோம்...
புயலோ பூகம்பமோ வரின் மட்டும்
தோள் சேர்த்திடக் கற்றோம்...

படைத்து அனுப்பியவனிடம்
ஒன்று கேட்க்கக் கூடுமெனில்....

ஆறறிவு கொண்டு நாம்
கற்று வந்த தீயவை எல்லாம்
வடிந்து போன
மூளை பெற்று

நல்வருடம் காண
ஏழாம் அறிவு ஒன்று கேட்ப்போம்!!!!

5 comments:

  1. Arumaiyaana kavidhai

    ReplyDelete
  2. சமரசம் அதை மிதிக்கக் கற்றோம்...
    தர்மங்கள் செய்ய அரிதாய் கற்றோம்..
    Powerful lines...
    Nice...
    Keep up the job dear..

    ReplyDelete
  3. Tamil entral Portri
    Tamilan entral Vetri
    valga Tamil
    Velga Tamila

    ReplyDelete
  4. கவிதை நன்றாக உள்ளது.. நீண்ட நாட்கள் காத்திருந்தோம் :) ஏன் இந்த இடைவெளி?

    ReplyDelete