Mar 3, 2011

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை...

நீ படிப்பதற்காகவே
எழுதப் பட்ட கவிதைகள் எல்லாம்

படிக்கப் படாமலேயே
கிழிக்கப் பட்டத் தருணங்களைப் பற்றி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை...

நீ கேட்பதற்காகவே
ஒளிப்பதிவு செய்த வார்த்தைகள் எல்லாம்

கேட்கப் படாமலேயே
எரிக்கப் பட்டது பற்றி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.....

உன்னை பார்ப்பதற்காக
உன் தெரு முனையில்

மணிக்கணக்காய் காத்துக் கிடந்தது பற்றி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.....

உனக்கு பிடித்த பொம்மை ஒன்றை
பரிசளிக்க ஆசைப்பட்டு

இதுவரை என் வீட்டுக்குள்
புதைத்து வைத்தது பற்றி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..

உன்னுடன் பேசவே
அருகில் வந்து....

தோற்றுப்போன போதும்...
உன் ஒரு புன்னகைக்காய்
தவமிருந்ததை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.....

உனக்காக வாங்கிய ரோஜாப்பூவும்...
காய்ந்த சருகாய்
என் அலமாரியில் இறந்து போனதென்று
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.....

உன் சிநேகிதியின் மரணம்
உன்னை விட என்னை பாதித்ததில்

இரண்டு நாள் நான் பசித்திருந்ததேல்லாம்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை....

அன்றொரு நாளில்
என்னை உரசி நீ நடந்த பொது

உன்னை பற்றிக் கொள்ள துடித்த
என் விரல்களை நான்
திட்டித் தீர்த்து பற்றி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை...

ஏதோ ஒரு நினைப்பில்
நீ என்னை தொட்டுப் பேச

என் இதயம்
வெளியே குதித்து வருவது போல்
உணர்ந்தேன்

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை...

உன்னை காதலிப்பதாய்
சொல்ல முயன்று
எனக்குள் மென்று
நான் உருகிப் போனேன்

என்று

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை...


நான் சொல்லி இருந்தால்
ஒப்புக் கொண்டிருப்பாயா....


உன் சுவாசம்
என் முகத்தில் படுகிற
தூரத்தில்

ஒருமுறை வருவாயா....

அந்த ஸ்பரிசத்தை
நெஞ்சில் புதைத்துக் கொண்ட பின்....


நீ என் காதலை ஏற்றாலும் சரி...

இல்லை என்றாலும் சரி....






4 comments:

  1. உன் சுவாசம்
    என் முகத்தில் படுகிற
    தூரத்தில்


    ஒருமுறை வருவாயா....


    அந்த ஸ்பரிசத்தை
    நெஞ்சில் புதைத்துக் கொண்ட பின்....




    நீ என் காதலை ஏற்றாலும் சரி...


    இல்லை என்றாலும் சரி....

    super ma........

    ReplyDelete
  2. good...........athithya

    ReplyDelete
  3. Kaadhalin valigalai unarthu eluthiyathai pondru irukindrathu....

    irunthalum matravargal kadhalain inbamaana avasthayay unara veikindrathu unathu kavithaigal...

    Ithai pol matrumoru kavithai seivaayaaga endru anbu kattalai idukiraan intha thozhan..

    Gopinath... :)

    ReplyDelete
  4. the last 4 lines r really fantastic...

    ReplyDelete