Nov 2, 2010

எதுவானாலும் கொடு

சுவாசிக்கவும் முடியவில்லை
தாகம் என்னை குடிக்கிறது

உன்னை மறந்துவிட்டதாய் மகிழ்ந்துகொண்டேன்
மறுகணம் உன் முகம்
என் உயிருக்குள் கூச்சலிடுகிறது..

மழையில் நனைந்து
ஒதுங்கப்பார்க்கும் மாலை நேரக்காற்றாய்
உன் மடியோடு
நான் புதையப்பார்க்கிறேன்...

என் மன அலமாரியில்
இதுவரை
கோவங்களும் வேகங்களும்
அடுக்கி வைத்த புத்தகங்களாய்...

நீ வந்து
மாற்றினாய்..
காதல் கீதைகளாய்..

என் முதல் கவிதை பிரசுரமானதும்
நான் கண்ட அதே ஆனந்தம்

உன்னை காணும் போதெல்லாம்
மீண்டும் மீண்டும்...

உனக்கு தெரியாது..
உன் பெயரை எழுதிய பின் தான்
என் பேனாக்கள் எழுத்து யாத்திரையை
தொடங்குகின்றன..

சில சமயம்..
நீ பேச மாட்டாய்...
கண்களை மூடி போகும் என் கண்ணீர் துளிகளால்...
என் தொடைக்குள் வறட்சிக்காலம்..

உன்னை எண்ணி
வருந்துகிற போது வருகிற...
கவிதைகளில் கூட...
பிரிவு வாசனை...
உனக்காக காத்திருந்து
காத்திருந்து..

என் காலடியில் வியர்வைக்கடல்..

உயிரே..
நீ கொண்ட காந்த அலைகளால்...
ஈர்க்கப்பட்டு
எனது இதயம்..
ஒட்டிக்கொண்டிருக்கிறது
உன் காலடியில்..

அன்பே,,
மொழிகளின் வரவுகளால் தான்
மௌனம் மறக்கப்படும்..

உன் மௌனத்தின் இடர்வுகளால்
நான்..
மொழி மறந்ததென்ன ??

புன்னகை கொண்டு நீ என்னை
தழுவும் போது..
உன்னை தொட்டுப்போக..
என் பத்து விரல்களும் அடம் பிடிக்கும்..
அறிவாயா??

உன்னால் நான் சந்திக்க போவது
மரணமா
வாழ்வா

தெரியாத போதும்...
இரண்டையும் நேசிக்கிறேன்..

அது உன்னால் வருவதால்...

No comments:

Post a Comment