Nov 2, 2010

என் நிலா மகள்

யாரது
ராத்திரி வரப்போகும்
தேவதைக்கு

இப்போதே பன்னீர் தெளிப்பது...?

மழையென்ற பெயரில்
அவளை
தொட்டு நனைக்க வந்துவிட்ட
தீர்த்தங்களே

நான் கூட
உங்களைப் போலத்தான்

அவளை
தொட நினைத்து
காத்திருக்கிறேன்
பல காலமாய்..

இத்தனை வண்ணக் கோலமா
வானோடு..

இரவினை அழகு செய்ய
என்னவள் வரும் நேரம்!!!

தூரமாய் போ மழையே...
உன் தூரலில் கரையக்கூடும் அவள்..

காற்றே
போதும் உன் முரட்டுத்தனம்..
மெதுவாய் உலவு..
அவள் மென்னிடை வருந்தக்கூடும்..

அதோ
அவள் பெயர் சொல்லி
சிரிக்கின்றன..
முகில் கூட்டங்கள்...

தீயில் கூட தேன் வார்க்கும்
கள்ளி அவள்...
அவளை வரவேற்க
எத்தனையோ வண்ண புடவைகளை
உடுதிப்பார்த்து விட்டு
இறுதியாய்...
நீல நிறத்தை போர்த்திக்கொண்டது வானம்...

வானமே..
நீயும் மோகத்தில் புத்தி இழந்தாய்

இரவில் வரப்போகும்
அந்த தாரகைக்கு..
நீ கருப்பாகவே காட்சியளிப்பாய்...

சூரியனை மெருகேற்ற
யாரோ கொண்டு வந்த
வண்ணமெல்லாம் சிதறிவிட்டத்தில்...
வானத்தின் வாசலில் வண்ண விழா...

சுட மட்டுமே
தெரிந்த சூரியனும்..
அவளால் குளிர்ந்து போவான்

ஒவ்வொரு இரவும்
அல்லியின் வருகையால்...
அழகாகும்..
ஒரு முறை பார்த்துவிட்டு
போவதாய் சொல்லி விட்டு
நட்சத்திரமெல்லாம்...
தவமிருக்கின்றன...

அவளை காண..
ஆயிரம் கண்கள் படைக்கப்பட்டாலும்

என் கண்களுக்கு வறுமையே மிஞ்சும்...

அந்த அழகியை போல் ஒரு
பவுர்ணமி வரக்கூடுமென்றால்
என் ஆயுள் முழுதும் நான்
வானமாகவே காத்திருப்பேன்..

அவளுக்காக சிவந்த அந்தி...
அப்படியே இருக்கிறது

வரச்சொல்லுங்கள் அவளை...

என்னிடம் கவிதைத்தாள்களும்
நிறைய இருக்கின்றன...

No comments:

Post a Comment