Nov 16, 2010

கணினிக் காதல்

இணைய தளத்தில் சந்தித்தோம்
என்ற போதும்..
இதயத் தளத்தில்
உன்னை இறுக்கமாய் பதித்தாய்....

நம்மிடையே நடந்த அத்தனைக்கும்
கணினியே சாட்சியாக...

கடைசியில் என்னை கையறுநிலையில்
விட்டுப் போனாய்...

இப்போது என் கவிதைகளில் அடிக்கிறது
கண்ணீர் வாசனை..

ஒரு உண்மை தெரியுமா...
நேரில் உன்னை பார்காவிடிலும்

நெஞ்சில் புதைந்துவிட்டாய்
அது சத்தியம்!

யார் சொன்னது
இனையதளத்தில்
இதயங்கள் இணைவது சாத்தியமில்லை என்று...

உன்னைப் போல் ஒரு ஜீவநதி
என்னுள் நுழைந்தது
கணினியின் முகம் பார்த்துத்தான்..

வாழ்கையின் இன்னொரு புறம்
அறிந்தேன் உன்
வாக்கியங்கள் கண்டு...

அதுவரை...
தொழிலாகவே தோன்றிய
கணினியுடனான என் உரையாடல்...

உன்னால் காதலைப் பூசிக்கொண்டது!

காதல் தரவல்ல எந்த சுகத்தையும்
நீ தராத போதும்...

உள்ளுக்குள் ஒரு அமைதி..

நீ தந்த முத்தமெல்லாம்
என் மடிக்கணினியின் முகப்போடு நின்று விட...

என் ஆருயிரே...
அந்த நொடிகளில் நான்
இறந்துபோனதுண்டு இதழ்கள் வறண்டு..

உன்னை சந்திக்க வேண்டுமென்று
ஏக்கம் கொண்டேன்
ஏதும் சொல்லாமல்...
போனாய்...

இந்த அகிலத்தில்
உன்னை எங்கே தேட நான்...

உயிருறுக அழுகிற வானமாய்
ஆனேன் நான்

என் கண்களை பிரிந்திட்ட ஒரு துளியாய்..
கடலுக்குள் புகுந்தாய் நீ..

எத்தனைதான் சொன்னாலும்
வார்த்தைகள் வற்றிப்போய்...

வெறுமை தின்று சிரிக்கின்ற
காகிதக்குப்பைகள் நடுவே....

கசங்கி கிடக்கும் என் மனதை
என்ன சொல்லி ஆற்றுவேன்....????

நீ எப்படி இருப்பாய் என்று யோசித்தபடி
நிலா முகம் கண்டு
புன்னகைத்தேன்...

அவசரமாய் வந்து
பயிர் சேதம் செய்யும்
அடைமழை போல்

என் உயிர் சேதம் செய்த உன்னை...

இன்னுமொரு ஜன்மத்திலேனும்
கண்டுபிடிக்க ஆசை!

4 comments:

  1. Migavum alagana Kavithai... Niraya Peyaruku thevaipadukindra kavithai.. :)

    ReplyDelete
  2. அவசரமாய் வந்து
    பயிர் சேதம் செய்யும்
    அடைமழை போல்

    என் உயிர் சேதம் செய்த உன்னை...

    இன்னுமொரு ஜன்மத்திலேனும்
    கண்டுபிடிக்க ஆசை!

    semaiya iruku...

    ReplyDelete
  3. Vaalthukkal Kavibharathi.. (Giri)

    ReplyDelete