Mar 10, 2011

நிஜம் நினைவிலிருந்தது

என்னை பிடித்திருக்கும்  என்று
நினைத்துத் தான்

உன்னை பிடித்ததாய்
சொல்லி முடித்தேன்....

என்னை பிடிக்குமென்றாய்

அப்போது முதல் முறையாய்
கால்கள் மண்ணில் படாத போதும்
நடந்தேன்

ம்ம்ம் மிதந்தேன்....

என் தோளில்
தலை சாய்த்து நீ கிடக்க
உன் தலை முடியோடு
கதை பேசியது என் தாடை....

என் மீது உன் சட்டை
உரசியதில்
வெட்கத்தில் குனிந்த தலை நிமிரவில்லை என் பேனா....

உன்னை அருகில் வைத்துக் கொண்டு...
உன்னையே கவிதையாய் செதுக்கிக் கொண்டிருந்தேன்.....

அன்று
மேகம் நிலவை மறைக்க....

உன் சுவாசக் காற்று
என் நுரை ஈரலுக்குள் நுழைந்த அழகை
எப்படிச்சொல்ல....

என் இடது கையேடு
உன் கை பிணைத்து.....

சிரித்தாய்....

அன்று நான் எழுதிய கவிதையும்
அத்தனை அழகாய் இருக்கவில்லை....

என்னை நீ தொல்லை செய்யக் கூடாதென்று
அமைதியாய் இருந்தாய்

உனக்கென்ன தெரியும்.....

உன் அழகும் ஸ்பரிசமும்
என்னை கொன்று குவித்த நிலை.....

இப்படியும் ஒரு அனுபவம்
உன்னோடு கிடைத்துவிட்ட சந்தோஷத்தில்
சிலிர்த்துக்  கிடந்தேன்.....

என்னை யாரோ உலுக்குவதாய்
உணர்ந்து

கண் விழித்தேன்.....

அருகில் என் அம்மா!!!

தூக்கம் களைந்து
எழுந்த போது....

நிஜம் நினைவிலிருந்தது....

சில நாட்களுக்கு முன்
நீ என்னை பிடிக்கவில்லை என்றதும்

பிரிந்து சென்றதும்!!!



3 comments:

  1. wooow.... superb!

    ReplyDelete
  2. //நிழலில் கதைப்பேசியே
    தீர்ந்து விடுகின்றன கற்பனைகள்
    விடிந்ததும் அணைந்து விடும் விளக்குகள் போல
    அது கற்பனை....
    அணைத்து விட துடிக்கிறேன்
    நிஜத்தோடு ஒன்றி விட்ட
    உன் நினைவுகளையும் -நீ
    சூரியன் என்று தெரியாமல்
    என்னை சுட்டெரித்த போதும் ..........//

    உயிரோட்டமான கவிதை அருமை சகோ

    ReplyDelete