Sep 20, 2011

வேடிக்கை மனிதர் கூட்டம்

யாரென்று தெரியாத போதும்
ஓரிரண்டு ரூபாய் தானம் செய்வோம்...
தர்மம் செய்ததாய்
விளம்பரம் செய்வோம்....

ஒருவேளை உணவின்றி
உளரும் சிலர் வறுமை நிலையை
கண்டும் காணாமலும்
ஏளனம் செய்வோம்....

தாய் தந்தை இல்லா
குழந்தைகள் கண்டால்
குற்றம் சொல்வோம்....

அவர் அன்னை தந்தையை
குதர்க்கம் செய்வோம்.....

நோயுண்டு சாலையில்
நொறுங்கி வாடும்
மனிதரை கண்டால்
ஒதுங்கி ஓடுவோம்....

மேடை பல ஏறி
வறுமை ஒழிக என
சொற்பொழிவாற்றுவோம்.....

சிந்தைக்குள் அதை நிறுத்த
தவறி
அற்பமாய் உலாவுவோம்....

உழுது உயிர் விதைக்கும்
விவசாயி
எலிக்கறி தின்று இறப்பதை கண்டும்
அவனது சமாதியில் அடுக்கடுக்காய்
கட்டிடங்கள் கட்டுவோம்....

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல்
ஜகத்தினை அழித்திட
நினைத்தான் ஒருவன்

நாமோ....

நமக்கு உணவில்லையெனில்....
ஒரு ஜகத்தையே அழித்திடுவோம்....

நாமெல்லாம்

நயவஞ்சகத்தில் நசுங்கி
சுயநலத்தில் ஒடுங்கி

புன்னகை சாயம் பூசி
ஆடம்பரமாய்...
ஆடித் திரியும்....

வேடிக்கை மனிதர் கூட்டம்...

No comments:

Post a Comment