Oct 27, 2010

நீயின்றி அமையாது..

நிசப்தமான நள்ளிரவு
நீயில்லாத இப்பொழுது
உன்னைத் தொட்டுப் பார்க்கிறேன்
பேனா முனை கொண்டு..

பேசாத வார்த்தைகளை
இதழுக்குள் இறுக்கி வைத்தாய்..

அதனால்
பார்த்தாயா..

எத்தனை
எழுத்துச்சாரல்கள்...

 உன் காதலில் நனைந்து
என் காகிதங்கள் எல்லாம்..
தலைத்துவட்டியபடி!

நிலாவும் நீயும்
உறவுக்காரர்களோ என
நினைத்து
வானம் பார்த்தால்

விண்மீன்கள் ஆமோதித்தன
கண்கள் சிமிட்டி...

என் வீட்டு ரோஜாச்செடியின்
ஈரத்துளியும்..

உன் நெற்றி வியர்வையை
நினைவூட்டினால் என்ன ஆவேன் நான்...?   

இத்தனை லட்சம்
இடைவெளி இருந்தும்

உன்னையே எழுத் வைக்கிறாய்..
உன்னைப் போல் வேறில்லை என
புலம்ப வைக்கிறாய்...

நீரின்றி அமையாது தான் உலகு..

எனக்கு..

நீயின்றி அமையாதடி உலகு!

1 comment: