Apr 8, 2011

வருவாயா ஒரு முறை?

என் சூரிய உதயமாய்
நீயே மலர்ந்த போது

என் அதிகாலை பொழுதுகள்
அழகாய் விடிந்தது....

தூக்கம் என்பது
மரணத்தின் ஒத்திகை அல்லவா...

நீ வந்து என் மரணத்தைத் தடுத்தாய்....

உனது நுனிவிரல் தொடுதலில் தானே
துளிர்த்தேன் நான்....

உன் வெளிச்சத்தில் வெட்கப்படும்
தாமரையாய்...

நீ வராத நாட்களில்
இருளுக்குள் இறுகிப் போயின என்
உணர்ச்சிப் பறவைகள்....

உன் உதயங்கள் செய்த 
மாற்றங்களால்

உயிர் வளர்த்த என் பூமி மீது
ஏனடா இந்த அஸ்த்தமனம்?

உன் வெயில் கரங்கள் படாது
வெளுக்கவே இல்லை

உன்னை பிரிந்தழுகும்
என் கண்கள்...!!!

வருவாயா ஒரு முறை..

உனக்காக பூத்த
என் புன்னகைப் பூக்கள் எல்லாம்
வாடிப் போகும் முன்...???



No comments:

Post a Comment